எனது தெருக்களில் உனது வாசம் -01
நீ விட்டுச் சென்ற
காயங்களில்
எதுவுமே எனக்கு வலிப்பதில்லை
நினைவுச் சூரியன்
உறங்கும் நிமிஷங்களில்
ரேகை அழிந்த உனது
கனவுகளை
என்னில் புதைத்துச் சென்றாய்..
பூக்களின் மெல்லிய
அதரம் கொண்ட
உன் இதயத்தில்
எங்கே இருந்து வந்தது
விசக் காற்று.....
பெரும் கடல் வழியாக
கிளம்பி வரும்
உப்புச் சாரல் கலந்த
காற்றில் .......
சிறு துவானமாய்...
நீ தெறித்து காணாமல் போகிறாய்....
விடுதலை என்று
நினைத்து .......
விசப் பானம் அருந்தி.... பின்
துயரத்தை சுமந்த
உன் விழிகளை
மீண்டும் நான் சந்திக்க
தயாராக இல்லை......
உன் மீதான பரிவும்
உன் துயரம் பற்றிய
இரக்கமும்
என்னில் இன்னும்
கொஞ்சமாய் மீதமிருக்கிறது...
நாம் சந்திக்காத
ஒரு பொழுதில்
நீ கொஞ்சம்
மீட்டிப் பார்...
என்னை பற்றி .....
(இன்னும் வாசம் வீசும்......)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக