டொமினிக் ஜீவா என்ற அற்புத மனிதர்.
டொமினிக் ஜீவா மூத்த எழுத்தாளர் கே.டானியல்யைப் போலவே பஞ்சமர் இலக்கயத்தை ஓர்மையுடன் படைத்தவர் இவரது தண்ணீரும் கண்ணீரும் சிறுகதை தொகுதிக்கு இலங்கையின் சாகித்திய மண்டல பரிசு கிடைத்தது, இவரது அயராத அர்பணிப்பின் பயனாக மல்லிகை எனும் மசிகையை சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களாக தனியாள்முயற்சியாக வெளியிட்டு வருகிறார், எண்பத்தி மூன்று அகவையிலும் சுறு சுறுப்பு மாறாத இளைஞ்சனாக இலக்கிய மேடைகள் தோறும் இவரைக் காணலாம் , எளிமையும், அன்பும், பக்குவமும் நிறைந்த இந்த அற்புத மனிதர் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் சக எழுத்தாளர்களை கணம் பண்ணவும், இளைய எழுத்தாளர்களை தட்டிக்கொடுக்கவும் என்றும் இவர் பின்நின்ற தில்லை, சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கியம் படைத்தது வரும் இவர் பற்றிய ஆய்வுகள் எதிர் காலத்தில் மேம்படும் என நம்பலாம் -முடிந்தால் புதிய கதிரேசன் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை சந்த்தித்து கொஞ்சம் உரையாடிப் பாருங்களேன் கட்டாயம் தொலை பேசி மூலம் அவருடன் பேசி விட்டு போவது நல்லது -0112320721
0 கருத்துகள்:
கருத்துரையிடுக