Related Posts with Thumbnails

செவ்வாய், 29 ஜூன், 2010

மனசு முழுக்க காதல்.

காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
ஊர் சுற்றி திரிந்த
எனக்கு ........
உருப்படி இல்லாத
எனக்கு...
யார் கண்பட்டதோ..
காதல் வந்திருச்சி

நிலவை நான்
ரசிக்கவில்லை..
நீல வானம்
விருப்பமில்லை..
கோல மயிலின் இறகை
என்றும்..புத்தகத்தினுள்
வைக்கவில்லை
காதல் என்ற பெயரில்
எங்கும் நான்...
கால் கடுக்க அலைந்ததில்லை.
இருந்தும்..
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி


யாருவிட்ட சாபமோ..
எனக்குள் காதல்
வேருவிட்டு போச்சி

நீல வானம்
அதில் நீந்து மேகம்
காதல் சுமந்த காற்று
காலைநேர பனித்துளி
இலையருகே பூக்கள்
இத்தியாதி...இத்தியாதி....

எல்லாம் ரசிக்கிறேன்
இப்போது எல்லாம் ரசிக்கின்றேன்

ஓடும் நதியிலே
என் காதல் நீந்துது
ஓலமிடும் கடலிலும்
என்காதல் வாழுது..
காரணம் ...
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி


நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

Read more...

வெள்ளி, 18 ஜூன், 2010

நதியின் பாடல்.

நதியின் பாடல்
ஒரு மெல்லிய ராகமாய்
ஒலிக்கும்..
இடைவிடாக் கனவுகளில்
இடறி விலும் வாழ்க்கை
நாறிய நிமிசங்களைப் பார்த்து
காறித்துப்பும் நினைவுகள்
அடைகாத்த அருவெறுப்புக்களை
அசைபோட்டு அழும் மனசு
தீப் பிடித்து எரியும்
காலத்தின் முதுகில்
இரண்டு வெண்ணிறக் கோடுகள்
ஒன்று பிறப்பாய்
மற்றையது இறப்பாய்
எல்லா சோகங்களையும்
சுமந்து கொண்டு
மவுனப் பாடல்களை
இயற்கை இசைக்கிறது..
எஞ்சியிருப்பது
நதியின் பாடல் மட்டுமே..
அதுவும் விதி மாறும் வரைக்கும்தான்.

நச்சியாதீவு பர்வீன்
இலங்கை.

Read more...

ஞாயிறு, 6 ஜூன், 2010

காத்திருப்பு...

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது,காத்திருத்தல் ஒரு அவஸ்தையான அனுபவம், காத்திருத்தலில் சுகம் இருக்கிறதென்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன், என்னளவில் காத்திருத்தல்
மிகுந்த அவஸ்தைக் குறிய விடயமாகும். அப்பப்பாஎவ்வளவுதான் காத்திருப்பது மனிதன் பிறந்ததிலிருந்து காத்திருத்தல் ஆரம்பமாகின்றது, எனக்கென்றால் அதிகமாக காத்திருக்க நேர்ந்தது பஸ் தரிப்பிடத்தில் தான், நான்பாடசாலை செல்ல ஆரம்பித்ததில்
இருந்து வேலைக்கு செல்லும் இன்று மட்டுக்கும் பஸ்சுக்காக
காத்திருந்து அவஸ்தை பட்ட, படும் நிமிடங்களை சொல்லி மாளாது, நான் எப்போதும் காதலிக்காகவோ, நண்பர்களுக்காகவோ காத்திருந்து அவஸ்தைபட்டது கிடையாது ஆனால் மணிக்கணக்காய் பஸ் தரிப்பிடத்தில்
கால் கடுக்க நின்று என் தலை விதியை பல தடவை
நொந்து கொண்டுள்ளேன், யாருக்காவது காத்திருத்தல் பற்றிய
சுவையான அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்.

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by