Related Posts with Thumbnails

செவ்வாய், 23 மார்ச், 2010

அம்மா

அழுது வடிக்கும்
குழந்தைக்கு அம்மாதான்
ஆறுதல்..

அம்மா மட்டும்தான்
எல்லாக் குழந்தைகளினதும்
இதயத்திற்கு
நெருக்கமானவள்

அம்மாவைக் கண்டால்
மட்டுமே குழந்தை
சும்மா அழும்

இன்றை மட்டுக்கும்
அம்மாவின் தாலாட்டை
மிஞ்சிய பாடல் எங்குள்ளது

அம்மா
குழந்தை வாசிக்கும்
முதல் புத்தகம்

அம்மா
குழந்தை பயிலும் முதல்
பல்கலைக் கழகம்.

அம்மாவின்
அன்புக்கு முன்னால்
இந்த உலகம் ஒன்றுமில்லை.

அம்மா ஒரு
மெழுகு வர்த்தி
தன் குழந்தைக்காக
தன்னை உருக்கி
ஒளி தருபவள்

அம்மா
உன் முந்தானை
பிடித்த வண்ணம்
விரல் சூப்பிய படியே
நீ செல்லும் இடங்களுக்கு
இன்னொரு தடவை
நான் அலையும் நாள்
இனி வராதா?


Read more...

புதன், 17 மார்ச், 2010

தலைநகர தாலாட்டு...

இன்னுமொரு தேர்தல்
ஏழையின் வாழ்க்கை
ஏற்றாத தேர்தல் ..
கூரையின் மேலே
குந்திக்கொண்டு
கூப்பாடு போடும்
காக்கை போலே
வாககேனும்
சாப்பட்டிட்காய்..
அலையும் ஆட்கள்
ஓட்டுப் போட்டவர்கள்
ஓட்டை ஆனார்கள்
ஓட்டை பெற்றவனோ
ஓயர்ந்து போயிட்டான் .
காலத்தின் சோதனையை..
கடவுளிடம் சொல்லி
அழத்தான் முடியும் ....

Read more...

புதன், 3 மார்ச், 2010

தலைப்பில்லாத என் கவிதை..


உயிரின் நிழலில்
கசிந்து உருகும்
காதல் விழிகள்
எங்கு சென்றதுவோ..

வழிகள் தோறும்
காதல் கொடிகள்
விரிந்து கிடக்கும்
ஞாபக வெளியில்..

இதயம் முழுக்க
சுகந்தம் பரவும்
இனிய நாட்கள்
இனிமேல் வருமா?

கைகள் கோர்த்து
கடற்கரை மணலில்
கவிதை படித்து
நடந்த நாட்கள்..

புல்வெளி தோறும்
அமர்ந்த படியே..
திட்டம் போட்டோம்
வாழ்க்கை பற்றி...

மழையில் நனைந்து
இன்பம் நுகர்ந்தோம்.
மாலைதோறும்
சேர்ந்தே திரிந்தோம்..

பட்டுப் பூச்சி
போல நாமும்
சுற்றித்திரிந்தோம்..
சுகமாய் வாழ்ந்தோம்.

யாரின் கண்கள்
நம்மைச்சுட்டது
காதல் கொடிகள்
அறுந்து விட்டது.

ஊரின் நினைவுகள்
உரசும் போதுகளில்
காதல் மனசும்
கண்ணீர் விடும்..

சோகம் நெஞ்சை
துளைக்கும் எனினும்..
தேம்பி அழத்தான்
மனசு துடிக்கும்.

காலக் கதவை
திறந்து பார்த்தால்
கண்ணீர் ததும்பும்.
காதல் கதைகள்..
எனதை உனதை
நமதைப் போல..

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by