Related Posts with Thumbnails

செவ்வாய், 23 மார்ச், 2010

அம்மா

அழுது வடிக்கும்
குழந்தைக்கு அம்மாதான்
ஆறுதல்..

அம்மா மட்டும்தான்
எல்லாக் குழந்தைகளினதும்
இதயத்திற்கு
நெருக்கமானவள்

அம்மாவைக் கண்டால்
மட்டுமே குழந்தை
சும்மா அழும்

இன்றை மட்டுக்கும்
அம்மாவின் தாலாட்டை
மிஞ்சிய பாடல் எங்குள்ளது

அம்மா
குழந்தை வாசிக்கும்
முதல் புத்தகம்

அம்மா
குழந்தை பயிலும் முதல்
பல்கலைக் கழகம்.

அம்மாவின்
அன்புக்கு முன்னால்
இந்த உலகம் ஒன்றுமில்லை.

அம்மா ஒரு
மெழுகு வர்த்தி
தன் குழந்தைக்காக
தன்னை உருக்கி
ஒளி தருபவள்

அம்மா
உன் முந்தானை
பிடித்த வண்ணம்
விரல் சூப்பிய படியே
நீ செல்லும் இடங்களுக்கு
இன்னொரு தடவை
நான் அலையும் நாள்
இனி வராதா?


0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by