Related Posts with Thumbnails

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பிரிவு.................?

கருவறையை

பிரிந்து வந்தோம்

இந்த மண்ணுலக வாழ்வுக்காய்

மறு உலக வாழ்வுக்காய்

இந்த மண்ணுலகையும்

பிரிந்திடுவோம்

பிரிவுகள் என்றும்

நிரந்தரமில்லை

கூடிப் பிரிவதில்

குதூகலம் இல்லைதான்

இருந்தும் பிரிவால்

வாடிப் போவதில்

வளம் என்ன உண்டு.

கல்விக்காய் வீட்டைப் பிரிகிறான்

மாணவன்.

கடவுளுக்காக குடும்பத்தைப் பிரிகிறான்

பக்தன்.

நட்புக்காக எல்லா வற்றையும் பிரிகிறான்

நண்பன்.

பிரிவு என்பது சங்கடம் தான்

சந்தோசமான சங்கடம்.

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by