Related Posts with Thumbnails

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

இந்திய பயண அனுபவம் -ஐந்து







பயண அலுப்பும், தூக்கமும் எம்மை ஆட்படுத்தியிருந்தாலும், அந்த காலை நேர பரபரப்பானது அவற்றை மறக்கச்செய்திருந்தது கிடைத்த காலை உணவை ஓரமாக உட்கார்ந்து உண்டு முடித்தோம், காயல்பட்டினத்துக் காரர்களின் புன்னகை மாறாத சலாம் எமக்கு புத்துணர்வை உண்டு பண்ணியது எனலாம் அந்தமனிதர்களையும், மண்ணையும் அவதானிக்கின்ற போது மிக நீண்ட உறவு அவர்களுக்கும் எனக்கும் இருப்பதாகவே பட்டது..ஒரு இனம் புரியாத அன்னியோன்யம் எமக்கிடையில் இருப்பதாக ஒரு உணர்வு..

நானும் கிண்ணியா ஏ.எம்.ஏ. அலி, அலி அக்பர், சாஜாத், ஆகியோர் அமர்ந்து பெசிக்கொண்டிருண்டோம் , அப்போது கப்பலில் மானா மக்கீன் அவர்களுடன் வந்தவர்கள் வந்து சேர்ந்து மீண்டும் எனக்கு அதிர்ச்சியை ஊட்டினர்.

ஆம் கப்பலில் வந்தவர்களில் மருதூர் மஜீத், டாக்டர் தாசீம் அகமது, ஹோரவப்போதான ஒ,ஏ, ரஹீம் அதிபர், ஊடகவியலாளர் ஷாமிலா, இப்படி பலர்
தமது துணையுடன் வந்திருந்தனர்..மட்டுமல்ல மானா மக்கீன் அவர்களும் தனது துணைவியுடன் வந்திருப்பதாக கேள்விபட்டேன்..அப்படிஎன்றால் எனக்கு மட்டும் ஏன் போய் சொல்ல வேண்டும்..
மானா மக்கீன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது.ஒரு மூத்த படைப்பாளி இளையவர்களுடன் இப்படியா? நடந்து கொள்வார்கள் இதில் நான் திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டதாகவே எனக்குப் பட்டது , நாங்கள் தானியத் தான் வருகிறோம் என்ற மனிதன் இண்டக்கி அவர் பொண்டாட்டியோடு வந்து பொய்காரன் ஆகிவிட்டார் மானாவின் இந்த ஏமாற்று வேலையினால் எல்லா இலக்கிய வாதிகளும் இப்படித்தானோ என்கின்ற எண்ணம் எனக்குள் மெல்ல எழுந்தது ..எங்கே இந்த மானா நாலு கேள்வி நறுக்கென்று கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த எனக்கு மறுநாள் ஜும்மாஹ் தொழுகை முடியுமட்டுக்கும்
கண்ணில் படவில்லை..

நாங்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு விடுதிகளில் தங்கவைக்கப் பட்டோம், குடும்பத்தினருக்கு தனியாக தங்க நல்ல ஏற்பாட்டினை மாநாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர், இவைகளை பார்க்கும் போது மானா எனக்கு புருடா விட்டுள்ளது தெளிவாகியது..
நாங்கள் அறுவர் ஒன்றாக தங்க வைக்கப் பட்டோம், மரைக்கார் வீதியில் அமைந்துள்ள சுல்தான் அவர்களின் வீட்டின் மேல் புறம் எங்களுக்கு வழங்கப் பட்டிருந்தது, காயல் பட்டின கடற்கரைப் பூங்காவுக்கு வெறும் இரண்டு நிமிட நடைதூராம் தான் .
எங்கள் குழுவில் ஒலிபரப்பாளர்களான அஹமத்.எம்.நசீர், யூனுஸ்.கே.ரஹ்மான், அஸ்ரப் சிஹாப்தீன், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன், அல் அசுமத், நான் ஆகியோர் அடங்கி இருந்தோம் ,
விடுதிக்கு சென்றதும் அலுப்புக் கழிய உறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் அடுத்தவர்களும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள் காரணம் பயணக்களைப்பு ..ஆனால் விடுதிக்கு சென்றதும் அரட்டையடிக்க ஆரம்பித்து விட்டோம் , பகல் சாப்பாடு வரும் மட்டுக்கும் எங்கள் அரட்டை தொடர்ந்தது..அரசியல், கலை,இலக்கியம், இப்படி எங்கள் அரட்டையில் அடங்கிய அம்சங்களாகும்

பகல் உணவு சுடச் சுட கோழி புரியாணி மிக ருசியாக இருந்தது.. சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றோம் பின்னேரம் கடக் கரைப் பூங்காவுக்கு செல்லும் கனவுகளுடன் .........

பின்னேரம் ஐந்துமணி வெயிலின் அகோரம் குறைந்திருந்தது, நாங்கள் கடத கரைப்போன்காவுக்கு செல்ல ஆயத்தமானோம், இடையில் சுல்தான் கொண்டுவந்த அருமையான டீயும் பிஸ்கட்டும் எமக்கு புத்துணர்ச்சியை ..ஊட்டியது..

காயல் பட்டின மண்ணில் இறங்கி காலாற நடக்கின்றோம், இந்த ஊரில் போலிஷ் நிலையம் இல்லை என்ற சங்கதியை டாக்டர் ஜின்னாஹ் கூறினார்..பொதுவாகவே இவ்வாறான பெரிய கிராமங்களில் போலிஷ் நிலையங்கள் இந்தியா பூராகவும் இருக்கிறது..ஆனால் இங்கு இல்லை என்றதும் ஆச்சிரியமாக இருந்தது..

வெறும் இரண்டு நிமிடத்தில் கடற்கரையை அடைந்தோம் ..அஹமத் நசீர் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசைப்பட்டார்..இதற்கிடையில் யூனூஸ்.கே.ரஹ்மானுக்கு பாத் ரூம் உபாதை..அந்தக் கடத கரையில் பாத் ரூமை எங்கு போய் தேடுவது..
இருந்தும் ஒரு திசையில் யூனூஸ் நம்பிக்கையோடு புறப்பட்டார்..

நாங்கள் கடற்கரை அருகில் அமர்ந்து கொண்டோம் , நிறைய காயல் பட்டினத்துக் காரர்கள் அந்த மாலையை கடத்கரையில்தான் களிப்பர்போலும் .
எம்மோடு வந்த பேராளர்கள் பலரும் கடற்கரைக்கு வந்திருந்தனர் ...
மெல்ல இருள் கவ்வத்தொடன்கியது.. பாத் ரூம் போன யுனூசைக் காணவில்லை
நானும் அகமத் நசீரும் யுநூசை தேடி அவர் சென்ற திசையில் புறப்பட்டோம்
கடற்கரையின் எல்லைதாண்டி ஊர் ஆரம்பிக்கும் இடம் மட்டுக்கும் தேடித் பார்த்து விட்டோம் ஆளைக் காணோம் , அங்கிருந்த கிழவியிடம் வினவ..இந்தப் பகுதியில் இருப்பது..பெண்கள் கழிப்பறை..அந்தப் பக்கம் போய்ப் பாருங்கள் என்று கூறினார்..மறுபடியும் நாங்கள் திரும்பி அவர் காட்டிய திசைப் பக்கம் போனோம்

அங்கே வயதானகாயல் பட்டின கூட்டம் கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர் முழுக்கை சர்ட், வெள்ளைச் சாரன், கையில் ஒரு லேஞ்சி, தலையில் வெள்ளைத் தொப்பி..இப்படித்தான் அவர்கள் இருந்தார்கள் ...நாங்கள் அவர்களை கடந்து..போகும் போது.. ..எங்களுக்கு சலாம் சொன்னார்கள்

நீங்க..சிலோனா? அவர்களின் முதலாவது கேள்வி.. ஆமென்றோம்
மாநாட்டுக்கு வந்தின்களோ? ஆமாம் இருவரும் ஒரே குரலில் ..
சிலோனில எங்க கொழும்பா? இல்லை அனுராதபுரம்..
அப்படியா.நான் அநுராதபுரத்தில ..நாலு வருஷம் இருந்திருக்கேன்..என்று..அந்த முதியவர் சொல்ல நாங்கள் யூனுசை தேடுவதை மறந்து விட்டு அவர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து விட்டோம், அவர்கள் இலங்கை பற்றி உயரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள், இலங்கைக்கு இஸ்லாத்தை கொண்டு வந்த்ததில் காயல் பட்டினத்தார்களின் சிறிய பங்களிப்பும் இருக்கிறது என்பதை அவர்களது பேச்சி தெளிவு படுத்தியது..
இதற்கிடையில் அடுத்த மூவரும் எங்களோடு இணைந்து கொண்டனர் ஆனால் யூனுசை மட்டும் காணோம்..
(அனுபவம் தொடரும்)

Read more...

சனி, 13 ஆகஸ்ட், 2011

இந்திய பயண அனுபவம்- நான்கு

சுல்தானுடன் நாங்கள்



சுமார் ஒரு மணி நேரப் பயணம் ஆகாயத்தில் , ஒரு வாறு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினோம்..எம்மைவிட முன்னணியில் இந்திய இருந்தாலும் நமது விமான நிலையத்தை விடவும் எல்லா வகையிலும் சென்னை விமான நிலையம் குறைவானதாகவே என் கணிப்பில் பட்டது..சென்னை விமான நிலையத்தில் எமக்கான வேறொரு பிரச்சினை காத்திருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை..

விமான நிலையத்தினுள் குடி வரவுப்பகுதி..பத்துப்பதினைந்து பேர் கொண்ட நாலைந்து வரிகள்..
நாங்களும்..வெவ்வேறு வரிகளில் நின்று கொண்டோம் எம்மோடு வந்த ஒருசிலரை குடிவரவு அதிகாரிகள் எதோ சொல்லி திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள் எனக்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை
எனது முறை வந்தது..
எனது முறை வந்தது..நாங்கள் நிரப்பி கையளிக்கும் பிரயாணிகளின் தகவல் நிறைந்த அப்ளிகாசனில் இந்தியாவில் நாம் தங்கியிருக்கும் இடத்தின் முகவரி தொலைபேசி இலக்கம் போன்றவற்றை..நிரப்ப வேண்டும்..
இதனை அங்கிருந்த அதிகாரி என்னிடம் கூறினார்..இதை நானோ அல்லது எமது
குழுவினரோ..அறிந்திருக்கவில்லை..
நாம் டுவரிஸ்ட் ஆகவே இங்கு வந்துள்ளோம் இனித்தான் ஹோட்டல் புக் பண்ணவேண்டும் பிறகெப்படி நாம் முகவரி தருவது..என்ற எனது கேள்விக்கு
இல்லை இது அரசின் சட்டம் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது..என்று அவர் கூறிவிட்டார்..

இந்திய சட்டப் படி மாநாடுகளுக்கு அல்லது கூட்டங்களுக்கு அங்கு செல்ல முடியாது என்ற விடயத்தை யாரோ அங்கு சொன்னார்கள் ஒவ்வொருவரும் தமது கைகளை பிசைந்து கொண்டிருக்க..

நாங்கள் செல்லும் காயல் பட்டன முகவரியும் தொலைபேசி இலக்கமும் இலங்கையில் வைத்தே என்னிடம் கிடைத்திருந்தது..உடனே அவற்றை நான் எழுதி ஒன்றும் தெரியாதது போல கொடுத்துவிட்டேன்..
அது ஏற்றுக் கொள்ளப்பட்டது இவ்வாறே இன்னும் சிலரும் எழுதிக்கொடுக்க அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது..
இதற்கிடையில் கவிஞர் ஜின்னாஹ் மாநாட்டுக் குழுவினருட தொடர்புகொண்டு
நிலைமையை இலகுவாக சமாளித்துவிட்டார்.
நாம் அனைவரும் விமான நிலைய கெடுபிடிகளை முடித்து விட்டு வெளியேறும் போது அங்கே அஸ்ரப் சிஹாப்டீனும் மாநாட்டு குழு அங்கத்தவர் மைதீன் ஹாஜி மற்றும் அல் அசூமத் ஆகியோர் எமக்காக காத்திருதார்கள் ,

சென்னை விமான நிலையம் தமிழ் மனத்தது தனித் தமிழ் ஆங்கங்கே ஆங்கிலத் தமிழ் , முற்று முழுதான தமிழின் அடையளப்படுத்தலை இங்கே உணரமுடிந்தது..
நாம் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத வாறு இன்னொரு அதிசியம் அங்கே நடந்தது...
அந்த நள்ளிரவிலும் கொட்டோ கொட்டு என்று..மழை அடைமழை..சுமார் ஒரு மணிநேரம் எங்கள் பயணம் தாமத மானாலும் நெருக்கடியான சனத்திரளின் மத்தியில் பயணிகளின் பயணம் கொஞ்சம் தாமதமாகியது என்னவோ..உண்மைதான்

எங்களை வரவேற்று வானம் பூமழை தூவுவதாகவே எனககுபட்டது..
ஆம் ஒருவாறு மழை நின்று போனது. ஏலவே எமக்காக அஸ்ரப் சிஹாப்தீன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த சொகுசு பஸ்ஸிலே எமது பயணம் காயல் பட்டினம் நோக்கி ஆரம்பித்தது .

சென்னையில் இருந்து காயல்பட்டினம் சுமார் அறுநூறு கி.மீ. என்று ஹாஜி மைதீன் கூறினார் சுமார் எட்டு மணி நேரப்பயணம் என்றும் அவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்...
சுமார் நள்ளிரவு பதினோரு மணிக்கு எமது பயணம் மீண்டும் ஆரம்பமாகியது..
எங்கள் பயணம் புறநகர் பாதைகளிலேயே ஆரம்பித்தது அந்த நள்ளிரவிலும் சென்னை பட்டப்பகலைப் போல காட்சி அளித்தது ...பஸ் இனுள் ஏறியவுடன் எங்களுக்கு போர்த்திக்கொள்ள பெட் சீட் தரப்பட்டது ..அப்போது அஸ்ரப் சிஹாப்தீன் ..ஒன்கல்க்கு தரப்பட்ட பொன்னாடைகளை நீங்களே போத்தி கொள்ளுங்க ...என்று அடித்த கமன்ட் கலகலப்பா இருந்தது..

கொஞ்சம் தூக்கம் கொஞ்சம் விழிப்பு என்று மதுரையை வந்து சேர்ந்தோம்
எமது காலைக் கடன்களை முடிக்க அது வசதியாக இருந்தது .
அங்கே இருந்த சின்ன ஹோட்டலில் நுழைந்து எமது பசியை போக்கிக் கொண்டோம்
நான் பொங்கல் சாப்பிட்டேன், அன்று தான் பொங்கல் முதல் முதலாக சாப்பிடுகிறேன் நல்ல ருசியாக இருந்தது.. எல்லா வகையான சைவ உணவுகளும் அங்கே இருந்தது
அந்த ஹோட்டலில் ஒரு வாசகம் என்னை கவர்ந்தது...

சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஆலயங்கள் மட்டுமல்ல
நாம் வேலை செய்யும் இடங்களும்தான் .

சுமார் ஒரு மணித்தியாலங்கள் மதுரையில் கழித்து மீண்டும் எங்கள் பயணம்
தொடர்ந்தது..தூத்துக்குடி.. தாண்டி காயல்பாட்டினத்துள் எமது வாகனம் நுழைகிறது.. அங்கே காயல் பட்டினம் என்பதை அடையாளப்படுத்தும் முகமாக
எந்த பெயர் பலகையும் இல்லை , இதனை அஸ்ரப் சிஹாப்தீன் சொன்னார் உண்மைதான் தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய முஸ்லிம் கிராமமான காயல்பட்டினத்தை அடையாளப்படுத்தத் ஒரு பெயர் பலகையாவது இல்லை என்பது பெருங்க குறையாகவே பட்டது..
காயல் பட்டணம் இஸ்லாமும் தமிழும் மணக்கும் அழகான கடற்கரை கிராமமாகும் ...
நாங்கள் ஒருவாறு காயல் பட்டினத்து மண்ணில் கால் பதித்து விட்டோம் , என் உள்ளமும் உடலும் சிலிர்த்தது..
பேராளர் பதிவு , காலை உணவு, பேராளருக்கான புத்தகப் பை என்பன எங்களுக்கு கிடைத்தது..
இதற்கிடையில் மானா மக்கீன் தலைமையில் கப்பலில் வந்த குழுவினர் வந்து சேர்ந்தனர் அவர்களின் வருகை மீண்டும் என்னை அதிர்சிக்குள்ளக்கியது..
காரணம் டாக்டர் தாசிம் அஹ்மத், ஹோரவப்போதானையைச் சேர்ந்த அதிபர் ஒ.ஏ. ரஹீம், மருதூர் மஜீத் , ஊடகவியலாளர் சர்மிளா என்று அநேகமானவர்கள் தங்கள் துணையுடன் வந்திருந்தனர் காணாக் குறைக்கு மானாவும் தனது மனைவியுடன் வந்திருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் மனிசன் கண்ணுக்கு தட்டுப்பட வில்லை , என்னை வேண்டு மென்றே மனைவியை கூட்டிவார முடியாமல் செய்ததற்கு மாநாவுக்கு நான் என்ன அநியாயம் செய்தேன் என்று தெரியவில்லை என்னைப் பொருத்தமட்டில் பிழையான தகவல்களை தரும் ஒருவர் நல்ல அமைப்பாளராக இருக்க முடியாது..இதுபற்றி மாநாவிடம் கேட்க வேண்டும் என்ற எனது ஆதங்கம் கடைசி வரைக்கும் நிறைவேற வில்லை என்பது வேறுகதை..அதற்கான காரணம் மானா முகம் கொடுத்து பெசாமையாகும்..
பேராளர்களுக்கு தங்கு மிட வசதிகளை விழா ஏற்பாட்டுக் குழுவினர் ஏலவே செய்திருந்தனர் நாங்கள் வெவ்வேறு குழுக்களாக தாங்க வைக்கப்பட்டோம்..

இதற்கிடையில் கிண்ணிய ஏ.எம்.ஏ.அலி, சாஜாத், கிண்ணியா அக்பர் அலி, ஆகியோர் பலத்தையும் பத்தையும் சுவாரசியாமாக பேசினார்கள். எமக்கான வாகனம் தயாரானவுடன் எமது குழுவினர் விடுதிக்குச செல்ல ஆயத்தமானோம்

எங்கள் குழுவில் மொத்தம் ஆறுபேர்கள் இருந்தோம் எல்லாம் ilakkiyaththil paluththa கட்டைகள், நான் மட்டும் வெறும் கன்றுக்குட்டி..
கவிஞர் ஜின்னாஹ், அல் அசூமத் ,அஸ்ரப் ஷிஹாப்தீன், ஒலிபரப்பாளர்கள் அஹமத் எம்.நசீர், யூனுஸ்.கே.ரஹ்மான், நான் எங்கள் அறுவருக்கும் காயல் பட்டினத்து மரைக்கார் வீதியில் சுல்தான் அவர்களின் வீடு தங்குவதற்கு கிடைத்தது..(சுல்தானைப் பற்றி சொல்லுவத்தட்கு அதிகம் உண்டு) காயல் பட்டின கடட்கரைப்போன்காவுக்கு வெறும் மூன்று நிமிட நடை தூரம் தான்..

ஒரு வாறு விடுதிக்கு வந்துவிட்டோம் பயணக் களைப்பு, மீண்டும் பசி..எங்களுக்குரிய அறைகளை ஒழுக்கு செய்துவிட்டு குளித்து விட்டு சாப்பாட்டு மேசைக்கு அறுவரும வந்து விட்டோம்..
சிறு நேரத்தில் சுடச்சுட கோழி புரியாணி விடுத்திக்கே வந்து சேர்ந்தது..புரியாணியை ஒரு கை பார்த்து விட்டு கொஞ்சம் அரட்டை..இலக்கியம் சினிமா, அரசியல், இப்படி பல தலைப்புக்கள் விவாதம் , விதண்டாவாதம், எல்லாம் கலந்த சுவையான அரட்டை..
பயண அலுப்பு மனதையும் உடம்பையும் சோர்வடையச் செய்திருந்தது...எல்லோரும் ஓய்வெடுக்கும் முகமாக தூங்கச் சென்றோம்.. intru வியாழக்கிழமை. இப்போது நேரம் இரண்டு முப்பது..பின்னேரம் ஐந்து மணிக்கு கடத்கைப் பூங்காவுக்கு போக முடிவு செய்தவர்களாக தூங்கச் சென்றோம்

(இந்திய பயண அனுபவம் தொடரும் )


Read more...

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்திய பயண அனுபவம்-3



ஆறாம் திகதி எங்கள் பயணம் . பயண ஏற்பாடுகளை ஏலவே நான் மனைவியின் உதவியுடன் செய்திருந்தேன் காலை ஒன்பது மணிக்கு நண்பன் நஸ்வருடன் அனுராதபுர இற்கு வந்து சேர்ந்தேன் ஒபீசில்முடிக்க வேண்டிய சில வேலைகள் இருந்தது.. அவசர அவசரமாக அதை முடித்து விட்டு சுமார் பகல் பன்னிரண்டு மணிக்கு விமான நிலையத்தை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது..
பின்னேரம் நாலுமணிக்கு எவரிவத்த சந்தியில் இறங்கினோம் அந்தநிமிடமே
எவரிவத்த பஸ் நிலையத்திற்கான பஸ் கிடைத்து விட்டது..உடனே பஸ் ஸ்டான்டிட்கு சென்று விட்டோம் அங்கிருந்து ஆட்டோ ஒன்றின் மூலம் எயார்போர்டிட்கு செல்வதுதான் எமது தீர்மானம் ஆனால் அது சாத்தியப்படவில்லை காரணம் ஆட்டோக்காரர்களின் நச்சரிப்புதான்

என்னமாய் ஏமாத்துகிறார்கள் விமான நிலையத்திற்கும் பஸ் நிலையத்திற்கும்
இடையிலான செட்டில் சர்வீஸ் இலவசமாக அரசினால் செயற்படுகிறது.
இலவசமாக இயங்கும் இந்த சர்வீஸ் பயணிகளுக்கு மிக பயனுடையதாகும்
ஆனால் இங்குள்ள ஆட்டாக் காரர்கள் பயணிகள் வந்து இறங்கிய உடனேயே
பஸ் பழுது அடைந்துள்ளதாகவும் விமானநிலைத்திட்கு ஆட்டோவில் தான் நீங்கள் செல்ல வேண்டும் என்று எம்மை எப்படியாவது ஆட்டோவில் ஏற்றி அனுப்புவதிலேயே..குறியாக இருந்தனர் இந்த ஆட்டோக்காரர்கள் பற்றி நான் ஏலவே அறிந்து வைத்துள்ளேன் இவர்களில் அநேகமானவர்கள் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்ற வலுவான மனப்பதிவு என்னுள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது..
அத்தோடு நஸ்வரும் ஒரே பிடியாக ஆட்டோவில் செல்ல மறுத்துவிட்டார் எனவே நாம் பஸ்ஸில் செல்வதென்று முடிவு செய்தோம்
ஒரு பத்து நிமிடம் சென்றிக்கும் பஸ் புறப்படுவதற்கு தயாராகி விட்டது இதற்குள்
இந்த ஆட்டாக் காரர்கள் பலரை பஸ் பழுதாகிவிட்டது என்று ஏமாற்றி கூட்டிச் சென்று விட்டார்கள் மாலை ஐந்து மணிக்கு நாம் விமான நிலையத்திற்குள்
நுழைந்து விட்டோம் .
இன்னும் நேரம் இருந்தது எனவே பார்வையாளர் பகுதிக்குள் போய் உடை மாற்றி வர போதுமான நேரம் இருந்தது..
சரியாக மாலை ஆறு மணிக்கு நான் விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டேன் வழமையான கெடுபிடிகள் முடிந்தவுடன் நசுவர் திரும்பி விட்டார் நாச்சியாதீவை நோக்கி .

எனது நுழைவாயில் இலக்கம் பத்து அங்கு சென்று பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது ஏனெனில் யாருமே அங்கு வந்திருக்க வில்லை அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்தபோது சிஸ்டம் திறக்கப்படவில்லை என்றும் வெளியில் தாமதிக்குமாரும் அன்புடன் கூறினர்
மீண்டும் ஒரு முறை நான் கடவை இலக்கத்தை சரிபார்த்துக் கொண்டேன்
இலக்கம் பத்துதான் சரி..யாராவது வருகிறார்களா என்று பார்த்தால் யாரையும் காணோம் .

ஒரு அரைமணிநேரம் கடந்திருக்கும் மாவனெல்லையைச்சேர்ந்த தேசிய சேமிப்பு வங்கியின் தலைநகரக் கிளையின் முகாமையாளர் ஸாலிஹ்.எ.மஜீத் வந்து சேர்ந்தார் இருவரும் பேசிக் கொண்டதில் இருந்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம் பின்னர் ஹெம்மதாகம கொட்டேகொட முஸ்லிம் வித்தியாலய அதிபர் அஸ்ஹரும் எம்மோடு வந்து இணைந்து கொண்டார் .

நாங்கள் பலதும் பத்தும் பேசினோம் நேரம் போய்க் கொண்டு இருந்தது விமான நிலையத்தினுள்ளே மகரிப் தொழுகையை நிறைவேற்றினோம் , சுமார் ஏழு மணிவரைக்கும் எம்மோடு payanam செய்யும் ஒருசிலரைத் தவிர யாரும் வந்திருக்க வில்லை ஏழு மணியின் பின்னர் நிறையப்பேர் வந்தார்கள் எனக்கு பரிச்சயமில்லாதவர்கள் ஒருமாதிரி நாங்கள் உள்வாங்கப் பட்டோம் இன்னும் சில நிமிடங்கள் மாத்திரம் எங்கள் பயணத்திக்கு மீதமிருந்தது ஒரு சில நிமிடங்கள்தான் .
இதற்கிடையில் மனைவி , மகள், பலதடவைகள் அலைபேசியில் பேசிவிட்டார்கள் மீண்டும் அலைபேசியின் அலறல் அது அஹ்மத் எம்.நசீர் இன்
இலக்கம் இந்த நேரத்தில் இந்த மனிசன் ஏன்? ஒருவேளை நம்மட பயணத்திக்கு வாழ்த்து சொல்ல போறாரோ..என்று நினைத்து ஆன்சர் பண்ணியபோது தான் அவரும் எம்முடன் வரும் இனிப்பான செய்தி கிடைத்தது..அத்தோடு அவர் அழைப்பை எடுத்த காரணம் எமது பயணக்குழுவின் ஏற்பாட்டாளர் காப்பியக்கோ ஜின்னாஹ் , எல்லோரும் வந்து விட்டார்கள் பர்வீனைக் காண வில்லை என்ற பதைப்பில் எடுத்திருக்கிறார் , நான் உள்ளே முதலாவதே வந்து விட்டேன் என்ற செய்தியை சொல்லி விட்டு நிறுத்திக்கொண்டேன் .
நேரம் செல்ல செல்ல மாநாட்டுக்கு செல்லும் பேராளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.. அதில் பலர் தமது மனைவுயருடன் வந்திருந்தனர்..
நண்பர் அன்சார், ஜவ்பர்கான், மீரா சாகிபு, எழுத்தாளர் புன்னியாமீன் இப்படி சிலர்
தமது மனைவியருடன் வந்திருந்தனர், நானும் எவ்வளவு ஆசைப்பட்டேன் மனைவியுடன் இந்த மாநாட்டுக்கு போக வேண்டும் என்று..ஆனால் மானா மகீன் பெண்களை அழைத்து வருவதில் மாநாட்டுக் குழுவினருக்கு சம்மதம் குறைவு என்ற வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன் ஆனால் கவிஞர் ஜின்னாஹ் தெளிவாக சொன்னார் நீங்கள் உங்கள் மனைவியை கொட்டிக்கொண்டு வரமுடியும் அது oru பிரச்சினையே இல்லை என்று..நான் மானா மக்கீன் அவர்களை வெகுவாக நம்பினேன் ,

மானா avarkal தொலைபேசியில் கதைக்கும் போது தானும் மனைவியைக் கூட்டிக் kondu வரவில்லை என்றும், ஜின்னாஹ்வும் அப்படித்தான் என்றும் உறுதியாக கூறினார் இத்தனை உறுதியாக இவர் கூறும் pothu நான் மனைவியை கூட்டிப் போவதில் ஆர்வம் காட்ட வில்லை ஆனால் இப்போது விமான நிலையத்தில் இந்த நண்பர்கள் தங்கள் மனைவியருடன் வருகை தந்ததைப் பார்த்த pothu மக்கீன் அவர்களில் கொஞ்சம் சந்தேகம் வந்தது..ஒரு வேளை அவர் சொல்லியும் கேட்காமல் இவர்கள் வந்துவிட்டார்களோ..அப்படித்தான் இருக்கும் இல்லைஎன்றால் எவ்வளவு பெரிய எழுத்தாளர் நமக்கு போய் பொய் சொல்லுவாரா?

intha நினைவுகளில் மனம் உழன்று கொண்டிருக்கையில் மவுலவி காத்தான்குடி பவுஸ் , யூனூஸ்.கே.ரகுமான், அஹமத்எம்.நசீர்....கிண்ணியா ஏ.எம்.ஏ.அலி, கிண்ணியா அக்பர் அலி, சாஜாத் இப்படி ஒரு குழுவும் கிண்ணியாவிலிருந்து வந்து சேர்ந்தது

இப்படி பிரபல்யங்கள் பலரின் வருகை தொடர கவிஞர் ஜின்னாஹ் வும் இறுதியாக வந்து சேர்ந்தார் தம்மோடு வருபவர்கள் எல்லோரும் vanthu விட்டார்களா? என்று அடிக்கடி சரி பார்த்துக்கொண்டார்,

எமக்கான விமானம் வந்திருந்தது..நாங்கள் விமானத்துள் ஏறும் நேரம் சரி..
மெல்ல நாங்கள் விமானத்தினுள் ஏறி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் நாம் அமர்ந்து கொண்டோம் , எனக்கு ஒரு ஆசனம் தள்ளி பூமுதீன் அமர்ந்திருந்தார் எங்களுக்கு இடையில் யாரும் உக்காரவில்லை அந்த ஆசனம் வெற்றிடமாக இருந்தது...

இந்தியக் கனவுகில் திளைத்தவனாக நான் இருந்தேன் சிலரை விமானத்திற்குள் வைத்தே எனது கமராவின் moolam பதிவு செய்து கொண்டேன்..இதோ..எமது..இந்தியப் பயணம் ஆரம்பமாகிவிட்டது....ஆம் நீண்ட தூரம் ஓடிய விமானம்..மேலெழுந்து பறக்கத்தொடங்கியது ...சென்னையை நோக்கி..
(இந்திய பயண அனுபவம் தொடரும்)

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by