Related Posts with Thumbnails

வியாழன், 26 நவம்பர், 2009

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.


ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

உலகம் முழுதும் உள்ள எல்லா மனிதர்களும் கடவுளின் படைப்புக்கள் கடவுளை அடைய தமக்கு
சரி என்று பட்ட மதத்தை தேர்ந்தேடுத்துக்கொண்டனர் , ஆனால் உலகில் அதிகமானவர்கள்
மத நம்பிக்கையில் உள்ளவர்கள் என்ற எடுகோளுக்கு வரமுடியும் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன்
,தாழ்ந்தவன், படித்தவன், பாமரன், கருப்பன் வெள்ளையன், இந்த பாகு பாடுகளையும் தாண்டி மனிதர்கள்
எல்லோரும் சமமானவர்கள் என்கின்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத கடமைதான் இஸ்லாத்தின்
ஐந்தாவது கடமை ஹஜ் ஆகும், இந்தவகையில் ஹஜ்ஜிப் பெருநாளை கொண்டாடும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும்
நல்ல மனம் படைத்த எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,

மலுரும் இந்தப் பெருநாளில் சமாதானமும், அமைதியும் வேண்டி பிரார்த்திப்போமாக, முடிந்தால் வாங்களேன் பெருநாள் பலகாரம்
சாப்பிடலாம்........பதிவுலக நண்பர்களே.. உங்களைத்தான்............

Read more...

செவ்வாய், 17 நவம்பர், 2009

புரிந்துணர்வு ஒன்றே காத்திரமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும்.

இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சமாதானம், எல்லா தரப்பினரும் சமாதானம் பற்றி கதை அளக்கின்றனர் , சமாதானத்திட்காக தாம் பாடுபடுவதாக குரல் உயர்த்தி கூறுகிறனர், ஆனால் அவர்களின் சமாதனத்திட்கான முன்னெடுப்புக்கள் ஆரோக்கியமானதாக அல்லது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை இது உலகளாவிய ரீதியில் நிறுவக் கூடிய வெளிப்படை உண்மையாகும் . இதனை சர்வதேச ரீதியில் ஆகட்டும், அல்லது உள்நாட்டில் ஆகட்டும் இதுதான் பொதுவான விதியாக, நியதியாக காலாகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது , இதெற்கெல்லாம் மிக முக்கிய காரணம் தான் என்ற அகங்காரத்தில் அடுத்தவரை ஆளும் வர்க்கமாக தம்மை நினைத்து ஆட்டம் போடுவதுதான் , இது சாதாரண ஒரு குடும்பத்தில் தொடங்கி சர்வதேசம் மட்டுக்கும் இதுதான் நிலை. ஒரு குடும்பம் அடுத்த குடும்பத்தை ஆள நினைக்கின்றனர், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஆள நினைக்கிறது, ஒரு கிராமம் இன்னொரு கிராமத்தை ஆள நினைக்கிறது , ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆழ நினைக்கிறது இந்த போக்கு நிலையான சந்தேகத்தையும், பரஸ்பரம் குரோதத்தையும், அடுத்தவர் மீது அவநம்பிக்கையையும் பரவலாக ஏற்படுத்தி உள்ளது , இந்த அவலமான போக்கு உலகெங்கிலும் ஒரு சீரற்ற தன்மையை ஏற்படுத்தி இதன் முற்று முழுதான தாக்கத்தின் கீழ் மூன்றாம் மண்டல நாடுகளை பிரதி நிதிப்படுத்தும் மக்கள் ஆட்பட்டு இருப்பதையும் அவதானிக்கலாம்,

இலங்கை, இந்தியா , பாகிஸ்தான், நேபாளம், ருவண்டா, உகண்டா, சோமாலியா. எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், ............இப்படி உலகில் உள்ள தொண்ணூறு சதவீத மான நாடுகளில் வாழும் மக்கள் தமது நிம்மத்தியை தொலைத்து தினமும் பயந்து பயந்து நாட்களை கடத்துகின்றனர். சர்வதேச அளவில் பல நூறு காரணங்களுக்காக உருவெடுத்திருக்கும் இந்த நிம்மத்தியற்ற தன்மையை நம்மால் மாற்ற இயலாதாகும், ஆனால் நம்மை சுற்றி யுள்ள இந்த அவலங்களிலிருந்து நமக்கு சற்று விடுபட்டு, கொஞ்சம் சந்தோசிக்க முடியும். அதற்க்காக நாம் தயாராக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தில் இருக்கிறோம்.
ஆம் நண்பர்களே, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, அடுத்தவர்களை புண்படுத்தாத அழகான வார்த்தைகள், எந்த மதத்தவர்களையும் மதிக்கும் , கண்ணியப் படுத்தும் மேன்மை, அடுத்தவர்களின் கருத்துகளையும் செவி மடுக்கும் பக்குவம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடுகளையும் தாண்டிய மனித நேசம் , அடுத்தவருக்கு உதவும் இரக்கமுள்ள மனம், குறிப்பாக நம்மை ஆட்டிப்படக்கின்ர ஈ-கோ வுக்கு குட் பை சொல்லுதல்....... இப்படி நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும், காலப்போக்கில் நமது நண்பர்கள், உறவிவ்னர்கள், பக்கத்து வீட்டார்கள் , என்று நம்மை சுற்றி நம்மை நேசிக்கின்ற , அன்புள்ளங்கள், தானாகவே உருவாக அது எதுவாக அமைந்து விடும்,
நமக்குள் அமைதியும், நிம்மதியும், வேண்டுமெனில், நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும் என்ற பொன் மொழியைத்தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன, மதங்களின் இந்த நல்லுப தேசங்களே நமக்கு நிம்மதி அளிக்க போதும் என்கின்ற போது மதத்தின் பெயரால், குலத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால் நாம் பிளவு பட்டு இன்றைகளின் நிம்மத்தியையும், சந்தோசத்தையும் இழந்து தவிக்கிறோம், நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம், ஒப்புக்காகவேனும் ஒரு புன்னகையை தவள விட நம்மால் முடிவதில்லை, புன்னகை தான் அன்பின் அடி நாதம் ஆகும்,
எழுத்தாளர்கள், சமூகத்தின் சிற்பிகள் ஆவார்கள்( இப்போது வலை பதிவாளர்களும் தான்) அந்த வகையில் நமக்கான சமூகப் பொறுப்பினை நாம் உதாசீனம் செய்ய முடியாது. சாதாரண மக்களை ஓன்றுபடுத்தும், அல்லது அவர்கள் மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கையை உண்டு பண்ணும் முயற்சியில் நாம் நமது படைப்புக்களை தரவேண்டும், இதற்கும் முன்னால் நமக்குள் ஒரு புரிந்துணர்வும், ஒற்றுமையும், வளர வேண்டும், எத்துனை கருத்து மோதல்கள், முரண்பாடுகள் நமக்குள் இருப்பினும் நாம் இதையும் தாண்டிய அன்னியோன்னியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ..........இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நம்மில் சிலர் தன்னம்பிக்கை இழந்து செயற்படாமல் இருப்பதால் தான் எதையும் நம்மால் சாதிக்க முடியாமல் இருக்கிறது..... அவரவர் தனித்துவத்தை இழக்காமல் நாமும் கொஞ்சம் நல்லவர்களாக ஐ-மீன், அடுத்தவர்களை மதித்து கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமா..நண்பர்களே....................

Read more...

புதன், 11 நவம்பர், 2009

எது தேச பக்தி...?

சில மாதங்களுக்கு முன்னால் எனக்கு வந்த இந்த கடிதம்...


“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.

அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.

இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”

அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று

தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி...?”

“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”

“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.

எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...

தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்

வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...

நிலங்களை இழந்து...

வாழ்க்கையை இழந்து...

விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக

வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...

சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...

பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...

இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...

நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...

இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற

ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.

அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்

வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?

இந்துஸ்தானோ...

பாகிஸ்தானோ...

இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.

அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...

விவசாயக் கூலியோ...

மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.

கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.

எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.

அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று

கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....

அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக...

சாதிச் சண்டையாக ...

மதச் சண்டையாக...

மாநிலச் சண்டையாக...

உருவெடுத்து தற்காலிகமாக

இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...

ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.

என்னே தேசபக்தி...?

பாவம்...

இவர்கள் விளையாட்டை

போராகப் பார்க்கிறார்கள்

போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்

தண்டனை நம்மைப் போன்ற

‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?


நன்றி...
சங்கர்.

2009/11/10 stalin felix

Read more...

புதன், 4 நவம்பர், 2009

இருக்கிறம்+வலை பதிவர்=0

எல்லோரும் போலவே மனசு நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு "இருகிறம்"
ஏற்பாடு செய்த வலை பதிவாளர் சந்திப்புக்கு நானும் சென்றேன், அதிகமான ஆர்வக்கோளாறு என்னை ஆட்டிப்படைக்க கொஞ்சம் நேரம் காலத்துடனையே ஆஜராகி விட்டேன், டொரிங்டன் இல் வைத்து நண்பர் வதீஸ் என்னோடு இனணந்து கொண்டார், என் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் ஆப்பு வைப்பது போல வானம் சிணுங்க தொடங்கியது, சிறுது நேரத்தில் பதிவர்களின் வருகை அதிகரித்தது, எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிரும் சமனுமான மறு தாக்கம் உண்டு என்ற நியுட்டனின் மூன்றாவது விதியைப்போலவே பதிவர்களின் வருகை அதிகமாக தூறல் அதிகரித்தது, மன்னர் அமுதன் தனது சக பதிவர் குழாமுடன் வந்திருந்ததார், யோ.. வொயிஸ் .......... அநியாயத்திக்கு அமைதி காத்தார்....... அடிக்கடி தனது மந்திர புன்னகையினை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார்.....மேமன் கவி, டாக்டர்.எம்.கே. வுடன், பலதும் பத்தும் பெசிக்கொண்டார்கர்கள்.

பதிவர்களுக்கான முதலாவது அமர்வு உள்ளக அரங்கினுள்ளும்(மழை காரணமாக)
இரண்டாவது அமர்வு திறந்த வெளி அரங்கிலும் நடை பெற்றது, மழையையும் கருத்தில் கொள்ளாது இருக்கிறம் குழுவினர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்(பதிவர்கள் மீது அத்தனை பாசமாம்).....

முதலாவது நிகழ்வில் கதாநயகி திருமதி சாந்தி சச்சிதானந்தம் கலக்கினார். பதிவர்கள், பார்வையாளர்கள் அறிமுகத்தை தொடர்ந்து இருக்கிறமின் கொள்கை, கோட்பாடு, பற்றிய மிகத்தெளிவான விளக்கமொன்றைத்தந்தார், பின்னர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் உரை ஆற்றினார்....

இரண்டாவது அமர்வு தூறல்களை கட்டுப் படுத்த போடப்பட்டிருந்த கூடாரங்களின் கீழ் கடி,குடியுடன் ஆரம்பமாகியது.. நண்பர் லோசன் அழகாக பேசினார்..(சத்தியமா),
பின்னர், பத்திரிக்கை ஆசிரியரின் அறுவல் வெறுத்துப்போன விஷயம் அதுதான்.
தமிழ் எழுத்துப்பிழைகள் அதிகமாக விடும் அவரது பத்திரிகையை திருத்துவதை விடுத்து பாவம் அந்த மேதாவி பதிவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார். எல்லாம் கலிகாலம், அந்த மேதாவியை யாரும் பேசக்கூப்பிடுவது இல்லை போலும் மனிசன் முடியுமான வரைக்கும் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார், பாவம் அவர் இருக்கிறமாவது அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரது நீண்ட மிக நீண்ட நாள் ஆதங்கத்தை தேர்த்துக்கொள்ள களம் அமைத்துக்கொடுத்தது.. மேதாவியின் பேச்சின் போதே கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது... நம்ம பதிவர்கள் பலர் தமது பதிவுகள் பற்றிய கலந்துரையாடலில் மூழ்கிப்போயிருந்தனர், நாகரிகம் கருதி சில மூத்த பத்திரிகையாளர்கள்,சில பதிவர்கள் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவ்வளுதான். தனது ஆதங்கங்களை கொட்டி (எம் தலையில்) தீர்த்துக் கொண்டு அவர் ஓய்ந்தார்,

இதற்கிடையில் வெளி நாட்டிலிருந்து இளைய தம்பி தயானந்தா, குருபரன் ஆகியோர் பேசினார்கள், குருபரன் ரெம்பவும் அறுத்தார்... பாவம் லூஸ் போலுக்கு சிக்ஸர் அடிக்கும் பாணியில் விளாசினார்... கேட்பவன் கேனயனா இருந்தா எருமைமாடு கூட ஏரப்பிலன் ஓட்டுமாம் அப்படித்தான் இருந்தது எல்லாமே, இதற்கிடையில் குடி,குடி .....சிலர் ஆனந்தப் பட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்ற கேள்வியே இல்லாமல்............இருக்கிறம்+வலைப்பதிவர் சந்திப்பு =௦௦0 இல் முடிந்தது................
எல்லாம் நம்ம தலை விதி தான் ...................

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by