Related Posts with Thumbnails

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஒரு கலைஞனின் கடைசி நிமிடம்..(வாசகனின் வாக்கு மூலம்)


ஸ்ரீ தர்பிச்சையப்பா, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் தான் எனக்கு பழக்கமானார் பாடசாலை காலங்களில் வானொலியிலும், டிவி யிலும் அவரை கண்டு ரசித்ததுண்டு பிற்பட்ட காலங்களில் தொழில் நிமித்தம் கொழும்பில் வசிக்க நேர்ந்தது அத்தோடு இலக்கியத்துறையுடனான தொடர்புகள் என்பன எனக்கு பலரின் அறிமுகத்தை தந்தது. அந்த வகையில் அறிமுகமாகமான ஒரு அன்புள்ளமானவர்தான் ஸ்ரீ தர் . ஸ்ரீதர் அற்புதமான கலைஞர்.
ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களான எல்.வசீம் அகரம், நிந்தவூர் சிப்லி, துறையூரான் அசார்தீன்ஆகியோரின் நூல் வெளியீடு ஒன்றாக கொழும்பு தமிழ் சங்கத்தில் நடை பெற்ற போது அந்த நிகழ்வுக்கு ஸ்ரீதரும் வந்திருந்தார் நிகழ்வுகள்
முடிவடைந்ததன் பின்னர், நிறையப் பேர் அறிமுகமானார்கள் அந்த நிகழ்வுக்கு ஸ்ரீ தரும் வந்திருந்தார், நான்அருகில் சென்று நீங்கள் ஸ்ரீதர் தானே என்று கேட்டேன்.
ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ஒருவர் மிகமிக சிம்பலாக அந்த நிகழ்வுக்கு வந்திருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கை குலுக்கி நீதானா அது? நானும் நினைத்தேன் ஒரு பொம்புலபுள்ள என்று நகைச்சுவையாக கூறினார். எனது பெயர் பெரும்பாலும் பெண்களுக்கும் வைக்கப் படுவதால் இந்த பிரச்சினை பல தடவை எனக்கு வந்துள்ளது,

பின்னர் அன்றைய தினம் நான், ஸ்ரீதர், பாயிஸா கைஸ், வெலிகம ரிம்ஸா முஹம்மது, குமாரி மற்றும் இன்னொரு நண்பி பெயர் ஞாபகமில்லை ஒரு சாலையோர சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்தினோம், எழுத்தாளர் பாயிஸா கைஸ் பில் ஐ செலுத்தினார், ஒரு இருபது நிமிட நேர அரட்டையின் பின் எல்லோரும் விடை பெற்றார்கள் நானும் ஸ்ரீதரும் மெதுவாக வந்து வெள்ளவத்தயில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்னால் உள்ள பஸ் ஹோல்டில் அமர்ந்து பலதும் பத்தும் பேசினோம் எனது "சிரட்டையும் மண்ணும்"
கவிதைத் தொகுதியை ஸ்ரீதருக்கு வழங்கினேன், அன்றைய தினம் இரவு பத்து மணி மட்டுக்கும் எங்களை அறியாமல் பேசிக்கொண்டே போனோம்.

அதன் பிறகு அவ்வப்போது நாங்கள் சந்தித்து கொண்டோம், எப்படியும் கிழமையில் ஒரு தடவை சந்திப்பது வழக்கம், ஸ்ரீதரின் மூலமாக நிறைய நண்பர்களை நான் அடைந்துள்ளேன், ஸ்ரீதர் மிக நல்லவன், சின்னப் பிள்ளை மாதிரி, அடுத்தவரை மதிக்கின்ற மனிதாபிமானி, சில்லை யூர் செல்வராசனுக்கு பிறகுள்ள ஒரு சகல கலா வல்லவன், என்ன தெரியாது ஸ்ரீதருக்கு? வஞ்சகம் தவிர
கடைசியாக கடந்த பதினேழாம் திகதி புதன் கிழமை அல்லது அதற்கு முதல் நாள்
இரவு ஸ்ரீதருடன் கதைத்தேன், அந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்ற வெலிகம ரிம்சாவின் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமைக்கு தனது வருத்தத்தை தெரிவித்த ஸ்ரீதர் எமது புத்தக வெளியீட்டுக்கு வருவதாக கூறினார், கடைசியில் எல்லாம் கனவாகவே முடிந்து போய விட்டது .
பகிர்ந்து கொள்ள பலவிடயங்கள் உண்டு ஸ்ரீதரைப் பற்றி .....
இன்று கலாபவனத்தில் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீதரின் புகழ் பாடும் பெரியமனிதர்கள் ஸ்ரீதர் நோய் வாய்ப பட்டிருந்த போது கண்டு கொள்ளவில்லை என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரிந்த உண்மையாகும்.
ஸ்ரீதரின் பூ(த) உடலை பார்வையிட கலாபவனத்திட்கு வந்திருந்த கவிஞர் கிண்ணியா அமீர் அலி சொன்ன கவிதை இது...

ஸ்ரீ தரா!
இன்று நீ ..
"சிரி" தரா
ஸ்ரீதரா..
இன்று உனக்காக
எல்லோரும்
அழுதரா?
நிலா வானத்தில்
நீந்திக் களித்த நாள்
நினைவுகளை ....
கலா வானத்தில்
கலந்து தந்தவனே
இன்று ...
கலாபவனத்தில்
கண்ணுறக்கம் கொண்டனையோ?
-கிண்ணியா அமீர் அலி-

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை வரிகள்

உன்
மதி விட்டுப் போயும்
விதி விட்டுப் போகவில்லை
கலை வாழ்வில்
விலை போகாத நண்பனே
நீ முன்னால் போ..
பின்னால் நாங்களும்..

கண்ணீருடன் நான் நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

சனி, 20 பிப்ரவரி, 2010

சிறு பான்மையினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும்..........

மீண்டும் ஒரு தேர்தல், களத்தில் புதிய முகங்கள் பல குதித்துள்ளன. பல பிரபல்யங்கள் ஆளுங்கட்சி சார்பாக தேர்தல் களத்தில் இல்லையில்லை தேர்தல் குளத்தில் வாக்கு மீன்களை அள்ளிக்கொள்வதட்கு தயாராகிவிட்டனர் சனத்ஜெயசூரிய மாத்தறை மாவட்டத்திலும், குறுந்தூர ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கேகல்ல மாவட்டத்திலும்ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜ பாக்ஸஅம்பாந்தோட்ட மாவட்டத்திலும் என்று தேர்தல் திருவிழாவை கலை கட்ட வைக்கும் முகமாக ஆளும் தரப்பு முழு முனைப்புடன் செயட்படுகிறது.
ஜேவிபி இனர் இம்முறை படுதோல்வி அடைவார்கள் என்பதை களநிலவரம் சொல்லுகிறது , தமிழரசுக்கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், போன்ற கட்சிகள் தமது பெரும்பாலான ஆசனம்களை இழந்து பொய் விடும், கடந்த ஜனாதி பத்திதேர்தளைப் போல இம்முறையும் ஆளும் கூட்டணி அமோகமாக வெற்றி பெரும் தேர்தல் நியாமாக நடந்தாலும், அல்லது அநியாயமாக நடந்தாலும்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் இந்தத் தேர்தலிலும் அது அம்மேல்தான்...சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து தாவியவர்கள் குறிப்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலிருந்து அரசுடன் இணைந்து செயப்படும் அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் பேரியல் அஸ்ரப் தவிர மற்ற எல்லோரும் மண்ணைக் கவ்வி விடுவார்கள் போலதான் இன்றைய கள நிலவரம் சொல்லுகிறது. ஆளும் கட்சி சார்பாக புதியவர்கள் பலர் வெற்றிபெறுவார்கள், பழையவர்கள் பலர் தோற்றுப் போவார்கள்

சிறு பன்ன்மையினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி அல்லது சிறுபான்மையினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற எடுகோள்இந்த இடத்தில் தான் நிறுவப் படுகிறது, கடந்தஜனாதிபதிதேர்தலில் மொத்த சிறுபான்மை சமூகமும் ஜெனரலுக்கு வாக்களித்து ஒரு வெளிப்படை உண்மையை தெரிந்து கொண்டார்கள் அதுதான் இப்போது அரசுக்கு சுக்கிர யோகம் தொட்ட தெல்லாம் துலங்கும் நாம் எத்தனை அரசுக்கு எதிராக வாக்களித்தாலும் அது அரசை ஒன்றும் செய்து மாறாக நம்மை நாம் இனங் காட்டிகொண்டவர்களாக மட்டுமே மாறுவோம் இதனால் நம்மீது வெறுப்பும், குரோதமும் மட்டுமே வளரும், இந்த உண்மையை சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம்,தமிழ் சமூகம் விளங்கி வைத்துள்ளது , எனவே இம்முறை சிறுபான்மையினரின் வாக்கில் அதிகமான சதவீதம் அரசாங்க கட்சிக்கே என்பது வெள்ளிடை மலை. வாக்கு வேட்டைக்காக மட்டுமே மக்கள், சமூகம், இனம் என்று பூச்சாண்டி காட்டும் அரசியல் முள்ளமாரிகளை, பச்சோந்திகளை விட ஆளும் அரசுடன் கை கோரத்து செல்வதே இன்றைய சூழலில் சிறுபான்மையினருக்கு நல்லது அதை விடுத்து நம்மை நாம் கட்டிக்கொள்ளும் விதத்தில் இந்ததேர்தலையும் நாம் பயன்படுத்த கூடாது , .....................................

Read more...

வியாழன், 18 பிப்ரவரி, 2010

"பேசப்படாதவர்கள்"

நம்மைதாண்டிச் செல்லும் எவரைப் பற்றியும் நாம் அநேகமாய் கவனிப்பதும் இல்லை கணக்கெடுப்பதுமில்லைஎவர் நல்லவர், எவர் கெட்டவர் என்கின்ற எந்த தகவலும் நமக்கு தெரிவதில்லை, அவர்களின் குடும்ப நிலவரம், கல்விப் பின்புலம், மற்றும் அவர்களின் பொருளாதார அடைவுகள் எதுபற்றியும் நாம் அறிந்திருப்பதுமில்லை, அதைப்பற்றி நாம் அலட்டிக்கொல்லுவதுமில்லை, அதக்குரிய நேரம் நமக்கு கிடைப்பதுமில்லை, ஆனால் நமது பயணப் பாதையில் நாம் தினமும் சந்திக்கின்ற ஒரு இனக் குழுமத்தினர் தான் "பிச்சைக்காரர்கள்" இவர்கள் யார்? எங்கிருந்து முளைத்தார்கள்? இவர்களின் பின் புலம் என்ன? இவர்களை பிச்சைக்காரர்களாக உருவாக்கியது யார்? அவர்கள் தானாக உருவானவர்களா? அல்லது சமூகத்தினால் உருவாக்கப் பட்டவர்களா? இப்படி பல நூறு கேள்விகள் இவர்களைத்தாண்டி செல்லும் போது நமக்குள் எழுந்திருக்கும். இது பொதுவாக எல்லோர் மனதிலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில்
எழுந்து தீர்வு இல்லாமலேயே நாம் அதை மறந்தும் பொய் விட்டிருப்போம்.

இன்றுகளில் வயது பேதமின்றி சிறுவர்கள், இளையவர்கள், பெண்கள்,வயோதிபர்கள் என்ற பாகுபாடுகளையும் தாண்டி களத்தில் குதித்துள்ளனர், இந்த அவலத்திற்கான நிறைய காரணங்களை சுட்டலாம்,

தமது வயது முதிர்ந்த பெற்றோகளை ஒழுங்காக கவனிக்காமையினால் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் முகமாக முதியவர்கள் பிச்சைக் காரர்களாக ஆகின்றனர், தமது பெற்றோரை உதாசீனம் செய்யும் பிள்ளைகளுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டான் என்கின்ற சத்தியம் புரியாமல் தமது வயது முதிர்ந்த பெற்றோகளை பிச்சை காரர்களாக உலவ விட்டுவிட்டு தாம் தமது மனைவி பிள்ளைகள் சகிதம் சுகமாக வாழ எத்தனிக்கும் பிள்ளைகளுக்கு இறுதியில் அவர்களும் பிச்சை எடுத்து வாழும் அவல நிலைதான் வரும் என்ற மெய்யியல் தெரிந்தும் தம் பெற்றோரில் கரிசனை அற்றவர்களாக இருப்பது கவலைக்கிடமான ஒரு விடயாமாகும்.

முறையற்ற விதத்தில் பிள்ளைகளை பெற்று பாதையில் வைத்து வளர்த்தெடுக்கும் ஒரு குளுமத்தினரையும் நாம் அவதானிக்கமுடியும், இந்தவகையில் சிறுவர்கள் பிச்சைக் காரர்களாக மாறுவது இந்த இடத்தில் இருந்துதான் இவர்களின் எதிர்காலம் எப்போதும் இருண்டு பொய் தான் இருக்கும், சாதாரண குழந்தைகளுக்கு உள்ள எந்த சலுகையும் இந்த அப்பாவி குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்ன பாவம் செய்ததற்காய் இந்தத் தளிர்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை? இந்த ஈனநிலைக்கு விடிவு எப்போது வரும் இவர்கள் பற்றி யார் தான் பேசப் போகிறார்கள் ? இன்னும் பேசப் படாதவர்களாக இவர்கள் இன்னும் இருப்பதுதான் பெருங்கவலை தரும் விடயம்.

முறையற்ற காதல் தொடர்பினால் அநாதை ஆகும் பெண்கள், காதலனால் விபச்சாரிகலாக்கப் படும் பெண்கள் இவர்கள் தான் கடைசியில் வாழ வழியில்லாமல் பிச்சைக்காரர்களாக வாழ தலைப் படுகின்றனர். ஒரு நாட்டின் கீர்த்திக்கு இழிவை தேடித்தரும் வகையில் வாழும் இவர்கள் பற்றிய அவதானத்தை அரசும், சர்வதேசமும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் ,
கடவுளிடமான எனது வேண்டுகோள் ஓன்று தான் எனக்கு பணத்தையும் பதவியையும் தா இந்த பெசப்படதவர்களின் வாழ்க்கையை மாற்றிக்காட்டுகிறேன்...........

Read more...

திங்கள், 15 பிப்ரவரி, 2010

சாமத்து கனவுகள்...


கனவுத் தூரிகை
படம் வரைந்து
வாழ்க்கைக் குறிப்பில்
பதிந்து வைக்கும்

சேவல்கள்
உறங்கிப் போய்விட்ட
நடுச்சாமத்து
நிமிசங்கள்
இருளில் புதைந்து
அமைதி காக்கும்

தூரத்தில்
சில்வண்டுகளின் ஓசை
இருந்தும்
காதுகளுக்கு
எதுவும் கேட்காது

சோம்பல் முறித்து
மெல்லச் சிணுங்கும்
மகளின் அதிர்வுகளால்
மனைவியும் நானும்
கண் விழிப்போம்

மனைவியின் தாலாட்டிட்கு
அசைந்து கொடுக்காமல்
அழும் மகளின் அதரங்களை
நானும் மனைவியும்
தட்டிக் கொடுப்போம்

என்னையும் மனைவியையும்
மாறி மாறி பார்த்துக்கொண்டே
சிரித்தும் அழுதும்
விளையாடியும்
என் மகள் நேரம் கடத்துவாள்

மகளின் விளையாட்டுடன்
சில இரவுகள்
விடிந்தும் போய் உள்ளன

என் உம்மாவும் வாப்பாவும்
என்னோடும்
இப்படித்தான்
காலம் கடத்தியிருப்பார்கள்

சாமத்தில் எப்படி
கனவு காண்பது
விளித்திருகையில்
இருந்தும்
விழித்திருத்தல்
பிடித்தித்திருகிறது
என் மகளுக்காக.............

Read more...

புதன், 10 பிப்ரவரி, 2010

வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

படிகள் பதிப்பகத்தின் வெளியீடான "வேலிகளை தாண்டும் வேர்கள்" அனுராதபுர மாவட்ட கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது எதிர் வரும் 21 -02 -2010
ஞாயற்று கிழமை மாலை 04 , 30 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை கேட்போர் கூடத்தில் கவிஞர் மேமன் கவியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக உயர் நீதி மன்ற சட்டத்தரணி என்.எம்.சஹீத் கலந்து கொள்ளும் இந்நிகழ்வின்
முதற் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார்கள்.
நூலின் விமர்சன உரையை எழுத்தாளர்களான திருமதி பத்மா சோமகாந்தன் மற்றும் அஸ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.நிகழ்வின் வாழ்த்துரையை மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவாவும், ஏற்புரையை நாச்சியாதீவு பர்வீனும் நிகழ்த்துவார்கள். நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாக கொண்ட இந்த கவித்தொகுதியில் அன்பு ஜவஹர்சா, பேனா மனோகரன், கெகிராவ சஹானா, கெகிராவ சுலைஹா, எம்.சி.றஸ்மின், நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம், அனுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ், அனுராதபுரம் சமான் ஆகிய மூத்த, இளைய படைப்பாளிகளின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

Read more...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வெற்றி என்பது தோல்வியடைந்தவரை அவமானப் படுத்தவல்ல!

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்னும் மூச்சி விடும் அவகாசம் கூட கழிந்து விடவில்லை அடுத்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது, எல்லாச் சுமைகளையும் மக்கள் மீதே சுமத்தும் ஆதிக்கம் நிறைந்தவெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எந்த வகையிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்கின்ற மனப் பாங்கில் நமது அரசும் செயற்படுவது கவலைக்கிடமான சமாச்சாரம் ஆகும்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் அரசுக்கு எதிராக வாக்களிதுள்ளதாகவே தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லுகின்றன, ஆனால் இந்த தேர்தலில் தில்லு முல்லு இருப்பதாக எதிர் கட்சிகளும் ஊடகங்களும் தெளிவாககருத்து தெரிவிக்கின்றன ஒரு வேளைஇந்த தேர்தல் முறைகேடாக நடை பெற்று இருந்தால் ஏன்அரசே திட்டமிட்டு சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்தில் அளிக்கப் பட்ட வாக்குகளை அவர்கள் அரசுக்கு எதிராக பாவித்துள்ளார்கள் நாம் வெற்றி பெற்றது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளால் என்பதை நிரூபிக்கும் விதத்தில் தமது செயற்பாட்டை மேட்கொண்டிருக்க முடியாது? அல்லது ஒரு வாதத்திட்காய் தேர்தல் எந்த முறை கேடுகளும் இல்லாமல் நடை பெற்றிருந்தால் ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் எந்த இனத்திக்கும் தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களிக்கும் பரி பூர்ண உரிமையுள்ளது !

சரி, தேர்தல் தான் முடிந்து போய் விட்டதே பின்ன எதுக்கு இந்த பில்டப் என்று சக நண்பர்கள் கேட்பது புரிகிறது, இப்போதுகளில் சிறு பான்மையினர் வாழும் பிரதேசங்களில் ஒரு "போஸ்டர்" அடிபடுகிறது அதில் உள்ளவாசகங்கள் அப்பப்பா .....பச்சைத் துவேசமானது அது இதுதான்................

"நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள்" தேர்தல் முடிந்த பின்னும் ஏன் இந்த கொலை வெறி.........?

"வெற்றி என்பது தோல்வியடைந்தவரை அவமானப் படுத்தவல்ல"

Read more...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நான்.........

நான்
தலைக்கணத்தின்
அத்திவாரம்..
நான்..அழிய வேண்டும்
நாடு செழிக்க
அம்பு இல்லாமல்
இதயத்தை காயப் படுத்தும் நான்

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by