Related Posts with Thumbnails

வியாழன், 18 பிப்ரவரி, 2010

"பேசப்படாதவர்கள்"

நம்மைதாண்டிச் செல்லும் எவரைப் பற்றியும் நாம் அநேகமாய் கவனிப்பதும் இல்லை கணக்கெடுப்பதுமில்லைஎவர் நல்லவர், எவர் கெட்டவர் என்கின்ற எந்த தகவலும் நமக்கு தெரிவதில்லை, அவர்களின் குடும்ப நிலவரம், கல்விப் பின்புலம், மற்றும் அவர்களின் பொருளாதார அடைவுகள் எதுபற்றியும் நாம் அறிந்திருப்பதுமில்லை, அதைப்பற்றி நாம் அலட்டிக்கொல்லுவதுமில்லை, அதக்குரிய நேரம் நமக்கு கிடைப்பதுமில்லை, ஆனால் நமது பயணப் பாதையில் நாம் தினமும் சந்திக்கின்ற ஒரு இனக் குழுமத்தினர் தான் "பிச்சைக்காரர்கள்" இவர்கள் யார்? எங்கிருந்து முளைத்தார்கள்? இவர்களின் பின் புலம் என்ன? இவர்களை பிச்சைக்காரர்களாக உருவாக்கியது யார்? அவர்கள் தானாக உருவானவர்களா? அல்லது சமூகத்தினால் உருவாக்கப் பட்டவர்களா? இப்படி பல நூறு கேள்விகள் இவர்களைத்தாண்டி செல்லும் போது நமக்குள் எழுந்திருக்கும். இது பொதுவாக எல்லோர் மனதிலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில்
எழுந்து தீர்வு இல்லாமலேயே நாம் அதை மறந்தும் பொய் விட்டிருப்போம்.

இன்றுகளில் வயது பேதமின்றி சிறுவர்கள், இளையவர்கள், பெண்கள்,வயோதிபர்கள் என்ற பாகுபாடுகளையும் தாண்டி களத்தில் குதித்துள்ளனர், இந்த அவலத்திற்கான நிறைய காரணங்களை சுட்டலாம்,

தமது வயது முதிர்ந்த பெற்றோகளை ஒழுங்காக கவனிக்காமையினால் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் முகமாக முதியவர்கள் பிச்சைக் காரர்களாக ஆகின்றனர், தமது பெற்றோரை உதாசீனம் செய்யும் பிள்ளைகளுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டான் என்கின்ற சத்தியம் புரியாமல் தமது வயது முதிர்ந்த பெற்றோகளை பிச்சை காரர்களாக உலவ விட்டுவிட்டு தாம் தமது மனைவி பிள்ளைகள் சகிதம் சுகமாக வாழ எத்தனிக்கும் பிள்ளைகளுக்கு இறுதியில் அவர்களும் பிச்சை எடுத்து வாழும் அவல நிலைதான் வரும் என்ற மெய்யியல் தெரிந்தும் தம் பெற்றோரில் கரிசனை அற்றவர்களாக இருப்பது கவலைக்கிடமான ஒரு விடயாமாகும்.

முறையற்ற விதத்தில் பிள்ளைகளை பெற்று பாதையில் வைத்து வளர்த்தெடுக்கும் ஒரு குளுமத்தினரையும் நாம் அவதானிக்கமுடியும், இந்தவகையில் சிறுவர்கள் பிச்சைக் காரர்களாக மாறுவது இந்த இடத்தில் இருந்துதான் இவர்களின் எதிர்காலம் எப்போதும் இருண்டு பொய் தான் இருக்கும், சாதாரண குழந்தைகளுக்கு உள்ள எந்த சலுகையும் இந்த அப்பாவி குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்ன பாவம் செய்ததற்காய் இந்தத் தளிர்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை? இந்த ஈனநிலைக்கு விடிவு எப்போது வரும் இவர்கள் பற்றி யார் தான் பேசப் போகிறார்கள் ? இன்னும் பேசப் படாதவர்களாக இவர்கள் இன்னும் இருப்பதுதான் பெருங்கவலை தரும் விடயம்.

முறையற்ற காதல் தொடர்பினால் அநாதை ஆகும் பெண்கள், காதலனால் விபச்சாரிகலாக்கப் படும் பெண்கள் இவர்கள் தான் கடைசியில் வாழ வழியில்லாமல் பிச்சைக்காரர்களாக வாழ தலைப் படுகின்றனர். ஒரு நாட்டின் கீர்த்திக்கு இழிவை தேடித்தரும் வகையில் வாழும் இவர்கள் பற்றிய அவதானத்தை அரசும், சர்வதேசமும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் ,
கடவுளிடமான எனது வேண்டுகோள் ஓன்று தான் எனக்கு பணத்தையும் பதவியையும் தா இந்த பெசப்படதவர்களின் வாழ்க்கையை மாற்றிக்காட்டுகிறேன்...........

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by