Related Posts with Thumbnails

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வெற்றி என்பது தோல்வியடைந்தவரை அவமானப் படுத்தவல்ல!

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்னும் மூச்சி விடும் அவகாசம் கூட கழிந்து விடவில்லை அடுத்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது, எல்லாச் சுமைகளையும் மக்கள் மீதே சுமத்தும் ஆதிக்கம் நிறைந்தவெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எந்த வகையிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்கின்ற மனப் பாங்கில் நமது அரசும் செயற்படுவது கவலைக்கிடமான சமாச்சாரம் ஆகும்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் அரசுக்கு எதிராக வாக்களிதுள்ளதாகவே தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லுகின்றன, ஆனால் இந்த தேர்தலில் தில்லு முல்லு இருப்பதாக எதிர் கட்சிகளும் ஊடகங்களும் தெளிவாககருத்து தெரிவிக்கின்றன ஒரு வேளைஇந்த தேர்தல் முறைகேடாக நடை பெற்று இருந்தால் ஏன்அரசே திட்டமிட்டு சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்தில் அளிக்கப் பட்ட வாக்குகளை அவர்கள் அரசுக்கு எதிராக பாவித்துள்ளார்கள் நாம் வெற்றி பெற்றது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளால் என்பதை நிரூபிக்கும் விதத்தில் தமது செயற்பாட்டை மேட்கொண்டிருக்க முடியாது? அல்லது ஒரு வாதத்திட்காய் தேர்தல் எந்த முறை கேடுகளும் இல்லாமல் நடை பெற்றிருந்தால் ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் எந்த இனத்திக்கும் தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களிக்கும் பரி பூர்ண உரிமையுள்ளது !

சரி, தேர்தல் தான் முடிந்து போய் விட்டதே பின்ன எதுக்கு இந்த பில்டப் என்று சக நண்பர்கள் கேட்பது புரிகிறது, இப்போதுகளில் சிறு பான்மையினர் வாழும் பிரதேசங்களில் ஒரு "போஸ்டர்" அடிபடுகிறது அதில் உள்ளவாசகங்கள் அப்பப்பா .....பச்சைத் துவேசமானது அது இதுதான்................

"நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள்" தேர்தல் முடிந்த பின்னும் ஏன் இந்த கொலை வெறி.........?

"வெற்றி என்பது தோல்வியடைந்தவரை அவமானப் படுத்தவல்ல"

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by