Related Posts with Thumbnails

வெள்ளி, 30 அக்டோபர், 2009

அந்த நாள் எப்ப வரும்.


படத்திலிருப்பது என் மகள் பாத்திமா மரியம்.

(நான் கத்தாரில் வேலை செய்த காலப்பகுதியில் என்னோடு வேலை செய்த இலங்கை, ஏறாவூரை சேர்ந்த நண்பன் ராபி இன் வேண்டுகோளுக்கு இணங்க எழுதிய கவிதை இது நண்பர் ராபி இன்னும் கத்தாரில் தான் இருக்கிறார் நான் இப்போது இலங்கையில்)

பொத்திவச்ச செம்பகப் பூ
பொசுக்கென்று பூத்ததுபோல்
என்ன சுத்தவச்ச பேரழகே
அங்கே-நீ சுகமா சுகமா.

ஒத்தையில என்மனசு
ஒன்ன மட்டும் நெனக்குதிங்கே
மெத்தையில படுத்தாலும்
என் நெனப்பெல்லாம் நீ தாண்டி.

காலையில எழுந்தாலும்
சாலையில நடந்தாலும்
கோலமயில் உன் உருவம்
என்னைக் கொள்ளாம கொல்லுதடி.

மாலையில வானத்தில
மஞ்சள் நிலா பார்க்கையில!
சோலைக்கிளி நீ தாண்டி-அங்கே
குத்தவச்சி குந்திருக்க.

நள்ளிரவு நேரத்தில நான்
நலமற்று தூங்குகையில்
கள்ளி உந்தன் கரங்கள் தான்
எந்தன் கனவினிலே தலை தடவும்.

துள்ளி வரும் காற்றிடத்தில்
நான் தூது ஒன்று சொல்லிவிட்டேன்.
கள்ளி உந்தன் காதுகளுக்கு
செய்தி முழுசாக வந்திச்சா...

நம் செல்ல மகள் நினைவுகள்
என்னை செல்லாக அரிக்கிறது
சொல்லி அழ ஆருமில்லை-இங்கே
சோகத்திற்கு பஞ்சமில்லை.

சொல்லி என்ன பயனிருக்கு
சோகத்தில் நான் கிடக்கேன்.
அள்ளி ஒன்ன முத்தமிடும்
அந்த நாள் எப்ப வரும்.

Read more...

வியாழன், 29 அக்டோபர், 2009

புதிய முயற்சி...

Read more...

சனி, 24 அக்டோபர், 2009

கெகிராவ சுலைஹா எனும் ஆளுமை.....




கெகிரவ சுலைஹா நவீன பெண்ணியம் சார் திசையில் ஆழமான மனப்பதிவுகளை நிறுவி நிற்பவர், மிக நீண்ட காலமாக எழுதிவரும் இவர் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதியது மிக மிகக் குறைவு..ஆனால் இவரது எழுத்துக்களில் உள்ள வீரியமும், ஆழமும் அற்புதமானது.ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கான அருமை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை இந்த வகையில் மொழி பெயர்ப்பு இலக்கியம் தொடர்பில் தனது அவதானத்தை கெகிராவ சுலைஹா செலுத்தியுள்ளார் என்பது மிகுந்த அவதானத்துக்குரிய விடயமாகும், தொடர்ந்தும் மல்லிகையில் அவரது மொழி பெயர்ப்பு கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ள நிலையில் தனது இலக்கியப் பதிவை நிறுவும் முகமாகவும், மொழி பெயர்ப்பு ஆளுமையை வெளிக்காட்டும் முகமாகவும் அண்மையில் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய தொகுதியான "பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்" எனும் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவர் எழுத்தாளர் கெகிராவ சகானாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வியாழன், 15 அக்டோபர், 2009

தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர்


தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்..."நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு 'கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை - நானா? அல்லது அவர்களா?).எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. 'வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: "பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh at aol dot com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)
நன்றி- http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_6425.html"

Read more...

திங்கள், 12 அக்டோபர், 2009

இலங்கை சிற்றிதலாளர்களின் ஒன்றுகூடல்.

காலம்:- 24/10/2009
இடம் :- கொழும்பு தமிழ் சங்கம்- சங்ககரன் பிள்ளை மண்டபம்.

ஒக்டோபர் வாசிப்பு மாதத்தைமுன்னிட்டு இலங்கை சிற்றிதழ்களின் வளர்ச்சிப் பரப்பை விரிவுபடுத்தும் முகமாக, இலங்கை சிற்றிதழ்களின் அறிமுகமும், இதழாசிரியர்களின் சந்திப்பும் நடை பெறவுள்ளது, இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு
அந்தனி ஜீவா- (செயலாளர்)-0776612315

Read more...

சனி, 10 அக்டோபர், 2009

"சிறீதர் பிச்சையப்பா" எனும் கலைஞன் ...


நான் மிகவும் நேசிக்கின்ற, மதிக்கின்ற கலைஞர்களில் "சிறீதர் பிச்சையப்பா" வும் ஒருவர், ஏகப்பட்ட அனுபவங்களை தனது கலைத்துறை வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அற்புத கலைஞன் அவன், நிறைய திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் இன்னும் சரியான சந்தர்பம் மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல் வாழும் அற்புதக் கலைஞன் , இப்போது மித்திரன் வாரமலரில்-கலா பவனம் பகுதியை அற்புதமாய் எழுதி வரும் ஸ்ரீதர் தற்பெருமை இல்லாத, எளிமையான கலைஞன் , நம் நாட்டில் தட்டிக்கொடுப்பவர்களையும் விட , முதுகில் குத்தும் ஜால்ரா பார்டி களே அதிகம் ஸ்ரீதருக்கு இந்த அனுப்பவம் கிட்டியிருக்கிறது, ஒரு நல்ல கலைஞனை மதிக்க நமது இலக்கியப் பரப்பு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. 071-6611952.

Read more...

வெள்ளி, 9 அக்டோபர், 2009

எல்.வசீம் அக்ரமின் "ஆக்ரமிப்பின் கால் தடம்" கவிதை நூல்..






2000 களின் பின்னர் அனுராதா புர தமிழ் இலக்கிய பரப்பில் காலடியெடுத்து வைத்த எல்.வசீம் அக்ரம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர், இவரது முதலாவது கவிதைத் தொகுதியான "மண்ணில் துழாவும் மனது" என்ற தொகுதியானது தமிழ் இலக்கியப் பரப்பில் மிகுந்த கவன ஈர்ப்பை பெற்றது, முதல் தொகுதி வெளியாகி மிக குறுகிய காலத்திலேயே தனது இரண்டாவது தொகுதியான "ஆக்கிரமிப்பின் கால் தடம்" என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு உள்ளார், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கடையாண்டு மாணவனான எல்.வசீம் அக்ரம் இன் இந்தத் தொகுதியும் தமிழ் இலக்கியப்பரப்பில் பேசப்படக்கூடிய சாத்தியப் பாடுகள் அதிகம் இருக்கின்றது.

தவிரவும் அனுராதபுர தமிழ் இலக்கியப்பரப்பனது இப்போதுகளில் மிகவும் அவதனிக்கத்தக்க களமாக விரிந்துள்ளது இவ்வருடம் மட்டும் சுமார் ஐந்து தமிழ் நூல்கள் இதுவரைக்கும் இப்பிரதேசத்தின் இலக்கிய ஆவணமாகவெளியாகி யுள்ளது


"பேனாவால் பேசுகிறான்"- நாச்சியாதீவு பர்வீன்.
"ஒரு ௯ டும் இரு முட்டைகளும்"- கெகிராவ சகானா.
"பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்"- கெகிராவ சுலைகா.
(ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள்)
"ஆக்ரமிப்பின் கால் தடம்" - எல்.வசீம் அக்ரம் .
"வேலியைத்தாண்டும் வேர்கள்"- நாச்சியாதீவு பர்வீன். எல்.வசீம் அக்ரம் . (அனுராதா புர மாவட்டத்து கவிஞர களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும்)

Read more...

வியாழன், 8 அக்டோபர், 2009

எமது மலேசியா பயண நினைவுகளில்..






Read more...

புதன், 7 அக்டோபர், 2009

சல்மாவின் வரிகள்.

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப்
புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

"இரண்டாம் ஜாமத்துக் கதை" என்ற சல்மாவின் கவிதை யிலுள்ள சில வரிகள் தான் இவை ...பெண்ணியம் பற்றிய ஆழமான அவதானப் பதிவினை ஏறபடுத்திக் கொண்டு இருப்பவர்களில் சல்மாவும் மிக முக்கியமானவர், ஆணாதிக்க வெறிக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் இவர் இன்றுகளில் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப் படுகிறார், இயற்கை மீதான வெறுப்பும் கோபமும் இவரது இந்தக் கவிதையில் தெளிவாய் தெரிகிறது............

Read more...

திங்கள், 5 அக்டோபர், 2009

நதியோடு பேசுகிறேன்.


எனது தெருக்கள்
விரிந்து கிடக்கிறது..
அமைதியாக.

புதருக்குள்
ஒளிந்து கொண்டு..
வழி மரிக்கும்
எந்த ஜீவ ராசிகளும்
என்னை தொந்தரவு செய்ய வில்லை.

நீண்ட பரப்பாக
வயல் வெளிகள்
நிசப்த பொட்டலாக
படுத்திருந்தது அனாதையாக.

குருவிகளின்
சல சல பில்லாத
சோகக் கிடங்காக
இலையுதிர்ந்து போன
மரங்களின் மவுனம் ....

பசுமை தொலைத்த
வனத்தில்
எங்குமே மாற்றம் ...

என்ன கொடூரம் நடந்தது
இந்த வனத்திற்கு..

சோகத்தின் விரல்களை
சூப்பிய வண்ணம் நதிகள்...

எவனோ ஒரு மனிதன்
கடந்து போயுள்ளான்
இந்த வனத்தை...

எதுவுமே என்கேள்விகளுக்கு
பதில் தருவதாக இல்லை..

இப்போது நான்
நதியோடு பேசுகிறேன்.

நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

வியாழன், 1 அக்டோபர், 2009

இந்த புன்னகை என்னவிலை...?



இன்று உலக புன்னகை தினமுங்க ஆமா ...சத்தியமாங்க ...ஐயோ என்ன நம்புங்க ....உண்மைய நம்ப வெக்க இவ்வளவு கஷ்டமா அடக் கடவுளே ..............!


உலக புன்னகை தினமான இன்று நீங்க எல்லோரும் கொஞ்சமாவது மனசு விட்டு சிரிக்கணும், எளவெடுத்த பிரச்சினைகள் தலையை அமுக்கிக் கொண்டு இருக்கையில் எப்படிடா மனசு விட்டு சிரிப்பது ......மண்டு ...........மண்டு ..................என்று நீங்க என்னைய வாயார வாழ்த்துவது எனக்கு கேட்கிறது .....உங்கள் மனம் நொறுங்கிய வாழ்த்துக்களுக்கு நன்றிகள், இருந்தும் இதையெல்லாம் பார்த்தா நாலு பேருக்கு நல்லத செய்ய முடியுமா ......இவரு பெரிய அவரு நல்லது சொல்ல வந்துட்டாரு அப்பிடித்தான நினைக்கிறீங்க .................உங்க நினைப்பு ரெம்ப சரிங்க இருந்தும் இதுக்காக செத்துப் போன சாளி சாப்ளினையும் அணு விஞ்ஞானி அப்துல் கலாமையுமா கூட்டிக்கொண்டு வரமுடியும்...... நமக்குள்ள உள்ள குப்பனோ, சுப்பனோ, அப்துல் காதரோ, அந்தோனியோ தாங்க சொல்ல வேணும் அதனல்தான் இந்த நாச்சியாதீவு பர்வீன் உங்கள் முன்னால் ஆஜராகி உள்ளேன் அதை ஞாபகப் படுத்த ...ஆமா நண்பர்களே ...............


உலகத்திலே அழகாக புன்னகைக்கக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும் தான், அதிலும் நம்ம அம்மணிகள் புன்னகை ஒன்றினால் இந்த பூமியையே உருட்டி பெரட்டிப் போடக்கூடியவர்கள், இந்த புன்னகைக்குப் பின்னால் பல சாம்ராஜியங்கள் தலைகீழாக மாறியுள்ளது எல்லாப் பெருமையும் நம்ம அம்மணிகளுக்கு தானுங்கோ .........அவங்களுக்கு ஒரு ஒ .........போடுவோமா?


இந்த உலக புன்னகை தினத்தில வலைப்பத்திவலர்களான நாம எல்லோரும் சேர்ந்து ஒரு பிரார்த்தன செய்வோம் அதுதான் உலகத்தில உள்ள எல்லா ஜீவராசிகளும் சண்ட சச்சரவு இல்லாம சிரிச்சி சந்தோசமா விட்டுக் கொடுபோட ஒருவரை ஒருவர் மதிச்சி வாழுகின்ற ஒரு நிலையை தா ................ என்கடவுளேறு

எல்லோருக்கும் பொதுவான கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் .


அத்தோட ஒரு சிறு புன்னகையினால் உங்கள் ஆறடி அழகு உடம்பில் உள்ள .....ஆயிரக்கணக்கான நோய்கள் குணமாகுதாம். முகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நரம்புகள், நாடிகள், நாலம்கள் என்று எல்லாம் புது இரத்தம் பாய்ச்சப்பட்டு, புத்துணர்ச்சி பெறுகிறது இதனால் முகம் அழகும் புதுப் பொலிவும் பெறுகிறதாம் .........இதை நான் சொல்ல இல்லிங்க அமெரிக்காவின் பல்கலைக் கழகத்தின் ஆய்வுகள் சொல்கின்றன.......அது சரி நம்ம சொல்லி யாரு நம்ப போறான் ...................

ஆம் நண்பர்களே நம்ம புன்னகையரசி கே.ஆர.விஜயா, நம்ம சினேகா இவெங்க புன்னகையை கடன் வாங்கியாவது எதுக்குமே சிரிக்காதே சில சீரியஸ் பார்டிகளுக்கு கொடுத்தால் என்ன?..........................


என்றும் புன்னகையுடன்.

நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by