Related Posts with Thumbnails

வெள்ளி, 9 அக்டோபர், 2009

எல்.வசீம் அக்ரமின் "ஆக்ரமிப்பின் கால் தடம்" கவிதை நூல்..






2000 களின் பின்னர் அனுராதா புர தமிழ் இலக்கிய பரப்பில் காலடியெடுத்து வைத்த எல்.வசீம் அக்ரம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர், இவரது முதலாவது கவிதைத் தொகுதியான "மண்ணில் துழாவும் மனது" என்ற தொகுதியானது தமிழ் இலக்கியப் பரப்பில் மிகுந்த கவன ஈர்ப்பை பெற்றது, முதல் தொகுதி வெளியாகி மிக குறுகிய காலத்திலேயே தனது இரண்டாவது தொகுதியான "ஆக்கிரமிப்பின் கால் தடம்" என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு உள்ளார், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கடையாண்டு மாணவனான எல்.வசீம் அக்ரம் இன் இந்தத் தொகுதியும் தமிழ் இலக்கியப்பரப்பில் பேசப்படக்கூடிய சாத்தியப் பாடுகள் அதிகம் இருக்கின்றது.

தவிரவும் அனுராதபுர தமிழ் இலக்கியப்பரப்பனது இப்போதுகளில் மிகவும் அவதனிக்கத்தக்க களமாக விரிந்துள்ளது இவ்வருடம் மட்டும் சுமார் ஐந்து தமிழ் நூல்கள் இதுவரைக்கும் இப்பிரதேசத்தின் இலக்கிய ஆவணமாகவெளியாகி யுள்ளது


"பேனாவால் பேசுகிறான்"- நாச்சியாதீவு பர்வீன்.
"ஒரு ௯ டும் இரு முட்டைகளும்"- கெகிராவ சகானா.
"பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்"- கெகிராவ சுலைகா.
(ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள்)
"ஆக்ரமிப்பின் கால் தடம்" - எல்.வசீம் அக்ரம் .
"வேலியைத்தாண்டும் வேர்கள்"- நாச்சியாதீவு பர்வீன். எல்.வசீம் அக்ரம் . (அனுராதா புர மாவட்டத்து கவிஞர களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும்)

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by