ஞாயிறு, 31 ஜனவரி, 2010
வெள்ளி, 29 ஜனவரி, 2010
எல்லாம் முடிந்தது..
ஒரு நிமிசமும்
எதிர்பாராதது என்று
யாருக்கும் சொல்ல முடியாது
எல்லாம் முடிந்தது
கலப்பட வியாபாரம்
நன்றாகவே
நடந்தேறியது
உண்மை ஜனநாயகம்
இன்னும் வாழ்கிறதாம் இங்கு
இன்னும் எட்டு
ஆண்டுகள்
கடவுளே என் மீது
கருணை காட்டு
யாருக்கும்
புரியாத புலம்பல் இது
பித்தர்களே கொஞ்சம்
நில்லுங்கள்
உங்களோடு நானும்
இணைந்து கொள்கிறேன்.
வெள்ளி, 22 ஜனவரி, 2010
நள்ளிரவில் நடக்கும் நரிகளின் நாடகம்..
இன்னும் ஒரு சில நாட்களில் நமது இலங்கைத் திருநாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கும்
தேர்தல் நடை பெறவுள்ளது இதில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர்களுக்கான போட்டி முன் எப்போதும் இல்லாத மாதிரி மிகக் கடுமையாக இருக்கின்றது உலகம் அமெரிக்க ஜனாதி பதித்தேர்தலை எப்படி உன்னிப்பாக அவதானித்ததோஅதே அளவு அவதானத்துடன் தான் இலங்கைத் தேர்தலும் இம்முறை அவதானிக்கப் படுகிறது
முழு உலகத்தினதும் கவனயீர்ப்பை பெற்றிருக்கின்ற இலங்கை தேர்தல் களம் உலகத்திலேயே மிக மிக கேவலமான சாக்கடைதனமான பிரச்சாரத்திட்கான முதலிடமாக இருக்கிறது.
இப்போதுகளில் இரவில் தேர்தல் காலத்தை முன்னிட்டு எல்லா டிவி சேனல்களிலும் இந்த பாலாய்போன அரசியல் தான் கருப்பொருளாய் அமைகிறது அதிலும் சிரச டிவி யில் அவ்வப்போது நடக்கின்ற சடன நிகழ்ச்சி பெருத்த்வரவேற்பை பெற்றுள்ளது மக்களின் பிரதி நிதிகள் என்று தம்மை காட்டிக் கொள்ள முனையும் இவர்கள் போடும்ஆட்டம் சொல்லிமாளாது அத்தோடு நிகழ்ச்சியை நடாத்தும் சிரச ஊடகவியலாளர்கள் களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் அழகே தனி தான் தமது அரசியல் காலத்தை இலஞ்சம் ஊழல் கொலை கொள்ளை ஆட்கடத்தல் அடாவடித்தனம் என்று பாவித்து விட்டு இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் இப்போது மக்களின் கையில் தான் எல்லாம் இருக்கிறது
பட்டி தொட்டி எல்லாம் எல்லா தரப்பினரினதும் இன்றைய தலைப்பு இந்தத் தேர்தல் தான் என்பதை புரிந்து கொண்டதனால் தான் இந்த நரிகளை சிரச கூப்பிட்டு காலன் துறையாடுகிறது.
நள்ளிரவில் நமக்காக கண்ணீர்விடும் இந்த குள்ள நரிகளின் நள்ளிரவு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைபடுமா? அல்லது மீண்டும் நரிகளின் வலையில் நாம் வீழ்ந்து ......கண்ணீர்விட நேருமா? தேர்தல் முடிந்தவுடன் நல்ல முடிவுடன் நாம் saந்திப்போம்.....................
Read more...
செவ்வாய், 5 ஜனவரி, 2010
மறைந்து போகும் இலக்கிய தடம்...?
இவர்தான் புத்தளம் ஏத்தாலை இன்பாஸ், நீங்கள் நாச்சியாதீவு பரவீன என்ற தொலைபேசி அழைப்பு ஒன்றித் கூடாக என்னோடு அறிமுகம் ஆகினார், நல்ல விமர்சகர், மனதில் பட்டதை இவர் பட்டென்று சொல்லிவிடுவதால் இவருக்கு நண்பர்கள் மிக மிகக் குறைவு, இலக்கியவாதிகள், அறிவிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பறந்து பட்ட தொடர்பை வைத்திருக்கும் இவர் நல்ல கவிஞ்சரும் ஆவார்,
புத்தளத்தை பொறுத்த மட்டில் ஜவாத் மரிக்கார், தில்லையடிச் செல்வன், உடப்பூர் வீர சொக்கன், போன்ற காத்திரமான மூத்த படைப்பாளிகளைத் தாண்டி வேறு எவரும் ஆக்க இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் பிரகாசிக்க வில்லை ஆனால் உதிரிகளாக அவ்வப்போது சிலர் தமது படைப்புக்களை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தவழ விட்டுள்ளனர் , புத்தளம் அஸ்மியா, ஏத்தாலை சம்சாபாத்,
ஏத்தாலை இன்பாஸ் இவர்களில் சிலராவர்கள், இந்தவகையில் இந்த இளம் தலைமுறையினர் இலக்கியத்தை விட்டு தூரப்போய் விட்ட ஒரு அவல நிலை இப்போது காணப் படுகிறது.
இந்தவகையில் 2005 களில் கவிதைகளின் மூலம் காலடி எடுத்து வைத்தவர்தான் ஏத்தாலை இன்பாஸ் நல்ல பல கவிதைகளை தந்து விட்டு அதனை தொடராமல் இப்போது அவ்வப்போதுகளில் எழுதிக் கொண்டிருக்கின்றார், இன்பாசின் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாகவே இருந்க்கின்றன
நல்ல கவித்து ஆளுமையும், சொல்வளமும் உள்ள இன்பாசினால் நல்ல பல ஆக்கங்களை தரமுடியும்
ஆனால் அவர் மவுனமாகவே இருக்கிறார்.
நீயும் நானும்
எச்சில் படுத்தி
துப்பிய இனிப்பை
எறும்பு கூட சுவைக்க வில்லை
நம் காதலின் புனிதம்
கேட்டு விடுமென்று...
வழமையான காதல் ரசம் சொட்டும் இந்த கவிதை கவிஞ்சரின் ஆழ மனக் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது, காதலை புனிதமாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் சுட்ட நினைத்துள்ளார் கவிஞ்சர்
சிறுகவிதை, மணிக்கவிதை, ஹைக்கூ பாணி கவிதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதை
இவரது கவிதைகளை ஒரு சேர படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது,
எத்தனை பேரோடு
வாதிட்டு வென்றாய்
உன் வாதம்
எமனிடம் பழிக்க வில்லையே
சட்டத்தரணி...
மரணம் வெல்ல முடியாத ஓன்று என்கின்ற ஆன்மீகத் தத்துவத்தை அற்புதமாய் வெளிப் படுத்துகிறார்
பொதுவாகவே சட்டத்தரணிகள் எனும் போது அவர்களது வாதத் திறனின் மூலம் பொய்களை மெய்ப் படுத்தியும், மெய்களை பொய்யாக்கியும் காட்டுவார்கள், அவர்களின் எந்தத் திறமையும் மரண வேலையில் உதவி செய்யாது மரணத்திடம் எல்லோரும் மண்டியிட்டே ஆகவேண்டும் என்கின்ற எதார்த்தத்தை அழகாக சொல்கிறார் இன்பாஸ்.
அவரது மன ஏக்கம் என்ற கவிதை இப்படி சொல்கிறது..
நீ ஊரை விட்டு
போனதில் இருந்து..
குயிலின் குரல்
பவுர்ணமி நிலவு
கொலுசு ஓசை
வளையல் துண்டு
ஒற்றை ரோஜா
ஜோடிப் புறா
இன்னும் காதல் கவிகள்
இவைகள் எல்லாமே
அடிக்கடி உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறன.
இன்பாசின் சொந்த அனுபவங்களைத்தான் இப்படி கவிதையாக வடித்துள்ளார் போலும், இன்பாசின் இன்னும் நல்ல கவிதைகள் இருக்கின்றன தமது அன்றாடங்களின் பதிவுகளை இன்பாஸ் மீண்டும் நல்ல கவிதைகளின் மூலம் தர முயற்சிக்க வேண்டும், நல்ல விமர்சகராக இருக்கின்ற இன்பாஸ் நல்ல கவிஞ்சராக வர தேடலும்
இடை விடா வாசிப்பும் அவசியம், இன்பாஸ் நல்ல படைப்புக்களை தருவாரா?
இன்பாசின் தொடர்புக்கு - 0712099370.