Related Posts with Thumbnails

செவ்வாய், 5 ஜனவரி, 2010

மறைந்து போகும் இலக்கிய தடம்...?

இவர்தான் புத்தளம் ஏத்தாலை இன்பாஸ், நீங்கள் நாச்சியாதீவு பரவீன என்ற தொலைபேசி அழைப்பு ஒன்றித் கூடாக என்னோடு அறிமுகம் ஆகினார், நல்ல விமர்சகர், மனதில் பட்டதை இவர் பட்டென்று சொல்லிவிடுவதால் இவருக்கு நண்பர்கள் மிக மிகக் குறைவு, இலக்கியவாதிகள், அறிவிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பறந்து பட்ட தொடர்பை வைத்திருக்கும் இவர் நல்ல கவிஞ்சரும் ஆவார்,

புத்தளத்தை பொறுத்த மட்டில் ஜவாத் மரிக்கார், தில்லையடிச் செல்வன், உடப்பூர் வீர சொக்கன், போன்ற காத்திரமான மூத்த படைப்பாளிகளைத் தாண்டி வேறு எவரும் ஆக்க இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் பிரகாசிக்க வில்லை ஆனால் உதிரிகளாக அவ்வப்போது சிலர் தமது படைப்புக்களை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தவழ விட்டுள்ளனர் , புத்தளம் அஸ்மியா, ஏத்தாலை சம்சாபாத்,
ஏத்தாலை இன்பாஸ் இவர்களில் சிலராவர்கள், இந்தவகையில் இந்த இளம் தலைமுறையினர் இலக்கியத்தை விட்டு தூரப்போய் விட்ட ஒரு அவல நிலை இப்போது காணப் படுகிறது.

இந்தவகையில் 2005 களில் கவிதைகளின் மூலம் காலடி எடுத்து வைத்தவர்தான் ஏத்தாலை இன்பாஸ் நல்ல பல கவிதைகளை தந்து விட்டு அதனை தொடராமல் இப்போது அவ்வப்போதுகளில் எழுதிக் கொண்டிருக்கின்றார், இன்பாசின் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாகவே இருந்க்கின்றன
நல்ல கவித்து ஆளுமையும், சொல்வளமும் உள்ள இன்பாசினால் நல்ல பல ஆக்கங்களை தரமுடியும்
ஆனால் அவர் மவுனமாகவே இருக்கிறார்.

நீயும் நானும்
எச்சில் படுத்தி
துப்பிய இனிப்பை
எறும்பு கூட சுவைக்க வில்லை
நம் காதலின் புனிதம்
கேட்டு விடுமென்று...

வழமையான காதல் ரசம் சொட்டும் இந்த கவிதை கவிஞ்சரின் ஆழ மனக் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது, காதலை புனிதமாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் சுட்ட நினைத்துள்ளார் கவிஞ்சர்
சிறுகவிதை, மணிக்கவிதை, ஹைக்கூ பாணி கவிதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதை
இவரது கவிதைகளை ஒரு சேர படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது,

எத்தனை பேரோடு
வாதிட்டு வென்றாய்
உன் வாதம்
எமனிடம் பழிக்க வில்லையே
சட்டத்தரணி...

மரணம் வெல்ல முடியாத ஓன்று என்கின்ற ஆன்மீகத் தத்துவத்தை அற்புதமாய் வெளிப் படுத்துகிறார்
பொதுவாகவே சட்டத்தரணிகள் எனும் போது அவர்களது வாதத் திறனின் மூலம் பொய்களை மெய்ப் படுத்தியும், மெய்களை பொய்யாக்கியும் காட்டுவார்கள், அவர்களின் எந்தத் திறமையும் மரண வேலையில் உதவி செய்யாது மரணத்திடம் எல்லோரும் மண்டியிட்டே ஆகவேண்டும் என்கின்ற எதார்த்தத்தை அழகாக சொல்கிறார் இன்பாஸ்.

அவரது மன ஏக்கம் என்ற கவிதை இப்படி சொல்கிறது..

நீ ஊரை விட்டு
போனதில் இருந்து..
குயிலின் குரல்
பவுர்ணமி நிலவு
கொலுசு ஓசை
வளையல் துண்டு
ஒற்றை ரோஜா
ஜோடிப் புறா
இன்னும் காதல் கவிகள்
இவைகள் எல்லாமே
அடிக்கடி உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறன.

இன்பாசின் சொந்த அனுபவங்களைத்தான் இப்படி கவிதையாக வடித்துள்ளார் போலும், இன்பாசின் இன்னும் நல்ல கவிதைகள் இருக்கின்றன தமது அன்றாடங்களின் பதிவுகளை இன்பாஸ் மீண்டும் நல்ல கவிதைகளின் மூலம் தர முயற்சிக்க வேண்டும், நல்ல விமர்சகராக இருக்கின்ற இன்பாஸ் நல்ல கவிஞ்சராக வர தேடலும்
இடை விடா வாசிப்பும் அவசியம், இன்பாஸ் நல்ல படைப்புக்களை தருவாரா?

இன்பாசின் தொடர்புக்கு - 0712099370.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by