Related Posts with Thumbnails

வெள்ளி, 22 ஜனவரி, 2010

நள்ளிரவில் நடக்கும் நரிகளின் நாடகம்..

இன்னும் ஒரு சில நாட்களில் நமது இலங்கைத் திருநாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கும்

தேர்தல் நடை பெறவுள்ளது இதில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர்களுக்கான போட்டி முன் எப்போதும் இல்லாத மாதிரி மிகக் கடுமையாக இருக்கின்றது உலகம் அமெரிக்க ஜனாதி பதித்தேர்தலை எப்படி உன்னிப்பாக அவதானித்ததோஅதே அளவு அவதானத்துடன் தான் இலங்கைத் தேர்தலும் இம்முறை அவதானிக்கப் படுகிறது

முழு உலகத்தினதும் கவனயீர்ப்பை பெற்றிருக்கின்ற இலங்கை தேர்தல் களம் உலகத்திலேயே மிக மிக கேவலமான சாக்கடைதனமான பிரச்சாரத்திட்கான முதலிடமாக இருக்கிறது.

இப்போதுகளில் இரவில் தேர்தல் காலத்தை முன்னிட்டு எல்லா டிவி சேனல்களிலும் இந்த பாலாய்போன அரசியல் தான் கருப்பொருளாய் அமைகிறது அதிலும் சிரச டிவி யில் அவ்வப்போது நடக்கின்ற சடன நிகழ்ச்சி பெருத்த்வரவேற்பை பெற்றுள்ளது மக்களின் பிரதி நிதிகள் என்று தம்மை காட்டிக் கொள்ள முனையும் இவர்கள் போடும்ஆட்டம் சொல்லிமாளாது அத்தோடு நிகழ்ச்சியை நடாத்தும் சிரச ஊடகவியலாளர்கள் களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் அழகே தனி தான் தமது அரசியல் காலத்தை இலஞ்சம் ஊழல் கொலை கொள்ளை ஆட்கடத்தல் அடாவடித்தனம் என்று பாவித்து விட்டு இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் இப்போது மக்களின் கையில் தான் எல்லாம் இருக்கிறது

பட்டி தொட்டி எல்லாம் எல்லா தரப்பினரினதும் இன்றைய தலைப்பு இந்தத் தேர்தல் தான் என்பதை புரிந்து கொண்டதனால் தான் இந்த நரிகளை சிரச கூப்பிட்டு காலன் துறையாடுகிறது.

நள்ளிரவில் நமக்காக கண்ணீர்விடும் இந்த குள்ள நரிகளின் நள்ளிரவு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைபடுமா? அல்லது மீண்டும் நரிகளின் வலையில் நாம் வீழ்ந்து ......கண்ணீர்விட நேருமா? தேர்தல் முடிந்தவுடன் நல்ல முடிவுடன் நாம் saந்திப்போம்.....................

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by