Related Posts with Thumbnails

வியாழன், 24 மார்ச், 2011

புள்ளிகளும் கோடுகளும்.

இல்லாமையிலிருந்து
புள்ளி தோன்றியது....
புள்ளிகளின் நெருக்கமும்
உடன்பாடும்
நேர்கோட்டையும்
இன்னும் பல கோடுகளையும்
பிரசவித்தன

கோடுகளினால்
கோணங்களும் வட்டங்களும்
உருவாகின

உருளைகளும் இன்னும்
பல பல உருக்களும்
தோற்றம் பெற்றன

கோவணம் கட்டிய
கோடுகள் சில
புள்ளிகளை புறந்தள்ளின.

நாகப்பாம்பை
ஒத்த உருவத்தில்
ஒரு சில நாட்பக்கல்கள்

வெற்று உருளையின்
வேதாந்தப் பேச்சுகள்
மட்டம் தட்டும்
மடத்தன மாங்காய்கள்

புள்ளிக்கு ஒன்றும்
புரியவில்ல
இந்தப் புதினங்களைப் பற்றி...

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by