Related Posts with Thumbnails

புதன், 30 டிசம்பர், 2009

நமது நட்புப் பற்றி




ஒரு அறுகம்
புல்லிலும் மென்மையான
நமது நட்பு பற்றி
இன்னும் எனது
கண்ணீர் துளிகள் பேசுகின்றது.

எல்லோருக்கும்
உன்னைப் போலேவே
அன்பும் மென்மையும்
நிறைந்த நண்பன் கிடைப்பதில்லை
அந்த வகையில்
நான் அதிஸ்டக்காரன்.

எந்தத் துர்தேவதையின்
சாபம் நம்மைப் பிரித்தது

ஒவ்வொரு விடுமுறையும்
நம் கிராமத்தை
தரிசனம் செய்யும்
தருணங்களில் ...
உன்னை தேடி அவாவும்.
என் கண்கள்
வெறுமை கலந்த
ஏமாற்றத்துடன் திரும்புகிறது..

வாழ்க்கைப் பாரத்தை
இறக்கிவைக்க
நீ ஒரு திசையில்
நானொரு திசையில்

எல்லாம் முன்னேற்றம்
அடைந்து விட்ட போதும்
இன்னும் நமது முகவரிகள் மட்டும்
மூடியே கிடக்கின்றது.
நாம் அறியாமல்.

நாச்சியாதீவு பர்வீன்.
armfarveen@gmail.com.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by