Related Posts with Thumbnails

வியாழன், 17 டிசம்பர், 2009

அதிரடியும் அசத்தலும்,(50 /50 )



இலங்கை, இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கலக்கலாக முடிந்து போயுள்ளது, இந்திய அணியின் அதிரடியான துடுப் பாட்டம் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தது, முரளியின் இடைவெளி தெளிவாக புரிந்து கொள்ளப்பட்ட ஆட்டமாக இதனைக் கொள்ள முடியும், ஒருவேளை முரளி இருந்திருந்தால் இந்திய அணியின் ஓட்ட வேகம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம், சேவாக்கின் அதிரடி பந்து தடுப்பளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது, டெண்டுல்கர்,தோனி, ஆகியோரின் துடுப்பாட்டம், கடைசியில் ஜடேஜாவின் இரண்டு சிக்சர்கள் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை
414 ஆக உயர்த்தியது,

இந்திய அணிக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்ற தோரணையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடங்கியது,
தில்சானின் அபாரமான அதிரடி துடுப்பாட்டம், மைதானத்தை அழகு படுத்தியது, மட்டுமல்ல இந்திய அணியினரின் வயிற்றில் புளியை கரைத்தது, உபுல் தரங்கவின் நிதானமான துடுப்பாட்டம், இலங்கை அணியினை வெற்றியின் பக்கம் இட்டுச்சென்றது, எதிபாராத சந்தர்ப்பத்தில் உபுல் தரங்க ஆட்டமிழக்க அணித்தலைவர் சங்க கார வந்த வேகத்திலே விளாசத் தொடங்கினார், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் தலைவலிதொடங்கியது எல்லா முனைகளிலும் சங்ககார இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்,
அநேகமாய் இலங்கையின் வெற்றி நிச்சயிக்க பட்டு விட்டதாகவே விமர்சகர்கள், பார்வையாளகள் கருதினார்கள்,

அந்தோ பரிதாபம் சங்கவின் விக்கட் வீழ்ந்த போது, ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்( நானும் தான்), தொடர்ந்து ஜெயசூரிய, ஜெயவர்தன, இருவருமே சொதப்பி வெறுப் பெற்றினார்கள், வந்த வேகத்தில் திரும்பிய இவர்கள் இருவரும்தான் இலங்கையின் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும் இருவரில் ஒருவர் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும்,
தொடர்ந்து தில்ஷன் இன் ஆட்டமிழப்பு இலங்கை அணியின் வெற்றிக்கனவை ஆட்டம் கொள்ளச்செய்தது,
கடைசியில் கண்டம்பி,அஞ்சல மேத்திவ் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்கள், கடைசியில் 12 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இலக்கு இலங்கை அணிக்கு இருந்தது, இது ஒன்றும் எட்ட முடியாத பெரிய இலக்கு இல்லை அத்தோடு
அன்றைய போட்டியைப் பொறுத்த மட்டில் அது ஒரு பெரிய இலக்குமல்ல, இந்த நிலையில் கூட இலங்கை அணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது, அத்தோடு கண்டம்பி, மதிவ் ஆகிய இருவரும் குறைந்த பந்துகளில் கூடிய ஓட்ட எண்ணிக்கை எடுக்க கூடியவர்கள், ஆனால், இருவருமே சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமத்தை மேற்கொண்டனர், இதனால் இலங்கை அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றிக்கனியை சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் நேர்த்தியான, துல்லியமான இறுதி ஓவர்கள் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தது, எல்லா அதிரடி துடுப்பாட்டக் காரர்களையும் தாண்டி இறுதி பந்து ஓவர்களை வீசிய அந்த இருவரின் அபாரமான ஆட்டம் பாராட்டத்தக்கது, வெறும் 3 ஓட்டங்களில் வெற்றி இலக்கை பறி கொடுத்த இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய ஒரு சிக்சர் அடித்து விட்டு ஆட்டம் இழந்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிக்கலாம்...........
நாளைய(18 / 12 / 2009 ) போட்டி இதை விடவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்வு கூற முடியாது இரண்டு அணியும் சமபலத்தில் இருந்தாலும், இந்திய அணிக்கே வெற்றிக்கான அதிக வாய்ப்பு இருக்கிறது, எப்படியோ நாளைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது இலகுவான வெற்றியாகவே அமையும் என்பது என் கருத்து.................?

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by