Related Posts with Thumbnails

வியாழன், 1 அக்டோபர், 2009

இந்த புன்னகை என்னவிலை...?



இன்று உலக புன்னகை தினமுங்க ஆமா ...சத்தியமாங்க ...ஐயோ என்ன நம்புங்க ....உண்மைய நம்ப வெக்க இவ்வளவு கஷ்டமா அடக் கடவுளே ..............!


உலக புன்னகை தினமான இன்று நீங்க எல்லோரும் கொஞ்சமாவது மனசு விட்டு சிரிக்கணும், எளவெடுத்த பிரச்சினைகள் தலையை அமுக்கிக் கொண்டு இருக்கையில் எப்படிடா மனசு விட்டு சிரிப்பது ......மண்டு ...........மண்டு ..................என்று நீங்க என்னைய வாயார வாழ்த்துவது எனக்கு கேட்கிறது .....உங்கள் மனம் நொறுங்கிய வாழ்த்துக்களுக்கு நன்றிகள், இருந்தும் இதையெல்லாம் பார்த்தா நாலு பேருக்கு நல்லத செய்ய முடியுமா ......இவரு பெரிய அவரு நல்லது சொல்ல வந்துட்டாரு அப்பிடித்தான நினைக்கிறீங்க .................உங்க நினைப்பு ரெம்ப சரிங்க இருந்தும் இதுக்காக செத்துப் போன சாளி சாப்ளினையும் அணு விஞ்ஞானி அப்துல் கலாமையுமா கூட்டிக்கொண்டு வரமுடியும்...... நமக்குள்ள உள்ள குப்பனோ, சுப்பனோ, அப்துல் காதரோ, அந்தோனியோ தாங்க சொல்ல வேணும் அதனல்தான் இந்த நாச்சியாதீவு பர்வீன் உங்கள் முன்னால் ஆஜராகி உள்ளேன் அதை ஞாபகப் படுத்த ...ஆமா நண்பர்களே ...............


உலகத்திலே அழகாக புன்னகைக்கக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும் தான், அதிலும் நம்ம அம்மணிகள் புன்னகை ஒன்றினால் இந்த பூமியையே உருட்டி பெரட்டிப் போடக்கூடியவர்கள், இந்த புன்னகைக்குப் பின்னால் பல சாம்ராஜியங்கள் தலைகீழாக மாறியுள்ளது எல்லாப் பெருமையும் நம்ம அம்மணிகளுக்கு தானுங்கோ .........அவங்களுக்கு ஒரு ஒ .........போடுவோமா?


இந்த உலக புன்னகை தினத்தில வலைப்பத்திவலர்களான நாம எல்லோரும் சேர்ந்து ஒரு பிரார்த்தன செய்வோம் அதுதான் உலகத்தில உள்ள எல்லா ஜீவராசிகளும் சண்ட சச்சரவு இல்லாம சிரிச்சி சந்தோசமா விட்டுக் கொடுபோட ஒருவரை ஒருவர் மதிச்சி வாழுகின்ற ஒரு நிலையை தா ................ என்கடவுளேறு

எல்லோருக்கும் பொதுவான கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் .


அத்தோட ஒரு சிறு புன்னகையினால் உங்கள் ஆறடி அழகு உடம்பில் உள்ள .....ஆயிரக்கணக்கான நோய்கள் குணமாகுதாம். முகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நரம்புகள், நாடிகள், நாலம்கள் என்று எல்லாம் புது இரத்தம் பாய்ச்சப்பட்டு, புத்துணர்ச்சி பெறுகிறது இதனால் முகம் அழகும் புதுப் பொலிவும் பெறுகிறதாம் .........இதை நான் சொல்ல இல்லிங்க அமெரிக்காவின் பல்கலைக் கழகத்தின் ஆய்வுகள் சொல்கின்றன.......அது சரி நம்ம சொல்லி யாரு நம்ப போறான் ...................

ஆம் நண்பர்களே நம்ம புன்னகையரசி கே.ஆர.விஜயா, நம்ம சினேகா இவெங்க புன்னகையை கடன் வாங்கியாவது எதுக்குமே சிரிக்காதே சில சீரியஸ் பார்டிகளுக்கு கொடுத்தால் என்ன?..........................


என்றும் புன்னகையுடன்.

நாச்சியாதீவு பர்வீன்.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by