Related Posts with Thumbnails

திங்கள், 5 அக்டோபர், 2009

நதியோடு பேசுகிறேன்.


எனது தெருக்கள்
விரிந்து கிடக்கிறது..
அமைதியாக.

புதருக்குள்
ஒளிந்து கொண்டு..
வழி மரிக்கும்
எந்த ஜீவ ராசிகளும்
என்னை தொந்தரவு செய்ய வில்லை.

நீண்ட பரப்பாக
வயல் வெளிகள்
நிசப்த பொட்டலாக
படுத்திருந்தது அனாதையாக.

குருவிகளின்
சல சல பில்லாத
சோகக் கிடங்காக
இலையுதிர்ந்து போன
மரங்களின் மவுனம் ....

பசுமை தொலைத்த
வனத்தில்
எங்குமே மாற்றம் ...

என்ன கொடூரம் நடந்தது
இந்த வனத்திற்கு..

சோகத்தின் விரல்களை
சூப்பிய வண்ணம் நதிகள்...

எவனோ ஒரு மனிதன்
கடந்து போயுள்ளான்
இந்த வனத்தை...

எதுவுமே என்கேள்விகளுக்கு
பதில் தருவதாக இல்லை..

இப்போது நான்
நதியோடு பேசுகிறேன்.

நாச்சியாதீவு பர்வீன்.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by