Related Posts with Thumbnails

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மரணத்தின் வாசல்..

காலச் சக்கரம்
நினைத்தபடி ஓடும்

நாம் நினைக்காத
ஒரு பொழுதில்
திடீரென்று நின்று..
தன் வாசல் திறந்து.
விரும்பியவரை
இழுத்துக்கொள்ளும்
மரணம்..

அது ஆணாக..
பெண்ணாக.
இன்னும் குழந்தையாக
என்று..
யாராகவும் இருக்கலாம்

ஒரு பெருமூச்சி தானும்
விட அவகாசம்
கிடைக்காத தருணமது

எந்த விருப்பமும்
எந்த வெறுப்பும்
நம்மை ...
திருப்பி கொண்டு வர மாட்டா.
மரணத்தின் வாசலை கடந்த பின்.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by