Related Posts with Thumbnails

வியாழன், 29 ஏப்ரல், 2010

"அங்காடித்தெரு" அழகான கவிதை.

தமிழ் சினிமாவின் மிகக்கேவலமான அடையாளங்களையும் தாண்டி அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றது
காமக் கூத்தின் கடிவாளமாகி, சினிமாவின் தரம் மிகக் கொச்சையாகி விட்ட
இந்தக் காலங்களில் வெளிவந்திருக்கும் ஒரு அற்புதமான சித்திரம் தான் "அங்காடித்தெரு" அன்றாடம் நம்மைச்சுற்றி நடக்கின்ற எதார்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மிளிர்கிறது இந்தப்படம்.

தயாரிப்பாளரின் இரண்டாவது படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு
ஒரு அழகியல் தன்மை கதை அமைப்பிலும் அதன் நகர்விலும் படத்தின்
வெற்றிக்கு ஊன்றுகோலாக அமையும் சாதகமான சங்கதிகள் அதிகம்.

எல்லாமே புது முகங்கள் ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும்
மிகத்தேர்ந்த நடிகர்களையும் விஞ்சும் தெளிந்த அப்பட்டமான நடிப்பை
ஒவ்வொரு காட்சியிலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
வறுமைதான் இந்த நூற்றாண்டின் சாபக்கேடு, வறுமையினால் திறமை
இருந்தும் கற்க முடியாதவர்கள் வாழ்க்கைப் பாரத்தை குறைக்க பட்டணம்
வந்து அடிமாடாக, அடிமைபோல வேலைசெய்வதும் வேலைத்தளத்தில் அவர்கள்
அனுபவிக்கின்ற கொடுமைகளையும் தோலுரித்து காட்டுகிறது "அங்காடித்தெரு".

முதலாளித்துவத்தின் சாக்கடைத்தனமான போக்கு எல்லாக்காலத்திலும்
ஒன்றுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுகிறது.அடிமட்ட
தொழிலார்களின் நலன்களில் அக்கறை காட்டாக முதலாளி வர்க்கத்தின் முகமூடியை அழகாக கிழித்துக்காட்டும் "அங்காடித்தெரு". ஒவ்வொருவரும்
கட்டாயம் பார்க்க வேண்டிய பேசும் சித்திரமாகும்.

மேற்கத்திய பாலியல் கலாச்சாரத்தை பின்பற்ற துடிக்கும் கமல் போன்றவர்கள்
"பருத்தி வீரன்", "அங்காடித்தெரு" போன்ற நல்ல சினமாக்களை பார்க்க வேண்டும்
இரானிய, சினிமாவின் எதார்த்தத்தை அப்படியே காட்சிப் படுத்திருக்கும் இந்தப் படம்
தமிழ் சினிமாவின் வளர்சிப்பாதையை மெல்ல கட்டமிட்டு காட்டியுள்ளது.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by