மனம் நிறைந்த பாராட்டு விழா...
கடந்த வெள்ளி கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் மனம் நிறைந்த பாராட்டு விழா ஒன்று நடை பெற்றது இலங்கை தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு கொடகே நிறுவனத்தினரின் விருது அண்மையில் மகாவலி கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது இவ்விருது தொடர்ந்தும் பதினோரு வருடங்களாக சிங்கள எழுத்தாளர் களுக்கு வழங்கப் பட்டு வந்தது, இம்முறை சிங்கள எழுத்தாளர்களுடன் சேர்த்து மூன்று தமிழ் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டது, டொமினிக் ஜீவா, ஏ.இக்பால், திருமதி கோகிலா மகேந்திரன் ஆகிய மூவருமே அவர்களாவார்கள், அந்த வகையில் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழாவை தெல்லிப்பளை இலக்கிய வட்டத்தினர் ஏட்பாடு செய்திருந்தனர், பெரும்பாலான இலக்கியவாதிகள், கல்வியியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிகமானோர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் இலக்கிய, உளவியல் ஆளுமைகளை பற்றி விவரணம் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக