எனது மலேசியா பயணத்தில்...
எழுத்தாளர் சை.பீர் முஹம்மது உலக தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கு அறியப் பட்டவர் மலேசியா வின் அடித் தட்டு மக்களின் வாழ்க்கை பிரச்சினை களை தனது படைப்புகள் கூடாக வெளிக்கொண்டு வந்ததவர் அண்மையில் நானும் எனது நண்பர்களான அஸ்வர் , வசீம் அக்றம், ஹிசாம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மலேசியா வுக்கு பயணம் செய்த நேரத்தில் நண்பர் திரு , ஞானசேகரன் அவர்களின் உதவியினால் நண்பர் சை. பீர் முஹம்மது அவர்களை சந்தித்து உரையாடினேன் நானும் நண்பர் ஹிசாம் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே அவரை சந்தித் தோம் , எளிமையான மனிதர், இலங்கை எழுத்தாளர் கள டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா, மேமன் கவி , ஞானசேகரன்,ஜின்னா சரிபுடீன், என்பவர் களை பற்றி விசாரித்தார், அவரது அண்மைய சிறுகதை தொகுப்பான "பயஸ் கொப்காரனும் வான்கோழிகளும்" அன்புடன் கையளித்தார், உலக தமிழ் இலக்கிய பரப்பில் ஆராயப்பட வேண்டிய படைப்பாளிகள் வரிசையில் மலைசிய சை.பீர் முஹம்மதும் குறிப்பிட்டு கூறக்கூடியவர்.
நாச்சியாதீவு பர்வீன்,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக