Related Posts with Thumbnails

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

எனது தெருக்களில் உனது வாசம் -01



நீ விட்டுச் சென்ற
காயங்களில்
எதுவுமே எனக்கு வலிப்பதில்லை

நினைவுச் சூரியன்
உறங்கும் நிமிஷங்களில்
ரேகை அழிந்த உனது
கனவுகளை
என்னில் புதைத்துச் சென்றாய்..

பூக்களின் மெல்லிய
அதரம் கொண்ட
உன் இதயத்தில்
எங்கே இருந்து வந்தது
விசக் காற்று.....
பெரும் கடல் வழியாக
கிளம்பி வரும்
உப்புச் சாரல் கலந்த
காற்றில் .......
சிறு துவானமாய்...
நீ தெறித்து காணாமல் போகிறாய்....
விடுதலை என்று
நினைத்து .......
விசப் பானம் அருந்தி.... பின்
துயரத்தை சுமந்த
உன் விழிகளை
மீண்டும் நான் சந்திக்க
தயாராக இல்லை......

உன் மீதான பரிவும்
உன் துயரம் பற்றிய
இரக்கமும்
என்னில் இன்னும்
கொஞ்சமாய் மீதமிருக்கிறது...

நாம் சந்திக்காத
ஒரு பொழுதில்
நீ கொஞ்சம்
மீட்டிப் பார்...
என்னை பற்றி .....
(இன்னும் வாசம் வீசும்......)




ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனம் நிறைந்த பாராட்டு விழா...


கடந்த வெள்ளி கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் மனம் நிறைந்த பாராட்டு விழா ஒன்று நடை பெற்றது இலங்கை தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு கொடகே நிறுவனத்தினரின் விருது அண்மையில் மகாவலி கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது இவ்விருது தொடர்ந்தும் பதினோரு வருடங்களாக சிங்கள எழுத்தாளர் களுக்கு வழங்கப் பட்டு வந்தது, இம்முறை சிங்கள எழுத்தாளர்களுடன் சேர்த்து மூன்று தமிழ் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டது, டொமினிக் ஜீவா, ஏ.இக்பால், திருமதி கோகிலா மகேந்திரன் ஆகிய மூவருமே அவர்களாவார்கள், அந்த வகையில் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழாவை தெல்லிப்பளை இலக்கிய வட்டத்தினர் ஏட்பாடு செய்திருந்தனர், பெரும்பாலான இலக்கியவாதிகள், கல்வியியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிகமானோர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் இலக்கிய, உளவியல் ஆளுமைகளை பற்றி விவரணம் செய்தனர்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

தோப்பில் முஹம்மது மீரானின் இலங்கை வருகை.

இந்தியாவின் பிரபல்யமான தமிழ் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் இலங்கை வருகை இலங்கை சார் தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த பதிவு இறக்கம் செய்யப்படும் மட்டுக்கும் பெரும்பாலும் வெளி வராத செய்தியாகும் இன்று இரவு அவருடனான சந்திப்பு ஒன்றை நண்பர் ஒருவர் தெரிவித்தார். மேலதிக விபரங்களை நாளைய தினம் இங்கே பார்க்கலாம்.

சிரட்டையும் மண்ணும் என்ற என் முதல் தொகுதி பற்றி

வறுமையோடு போராடும் வாழ்க்கை பாதி என்றால் போரோடு போராடும் வாழ்க்கை மீதி, போரின் அவலங்களும், கொடுமைகளும் நம்மீது திணித்து விட்டிருக்கும் மேலதிக சுமையும் இன்னும் இன்னும் நம்மை நமது பாதையில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது, அந்த வகையில் தமது தாய் மண்ணை விட்டு வெளியேறியவர்கள் அங்கே விட்டு வந்தது தாம் காலாதி காலமாக வாழ்ந்து வந்த மண்ணையும் தமது சிறுசுகள் விளைடி மகிழ்ந்த சிரட்டையும் மட்டும்தான், அந்த அழியா நினைவுகளின் அடையாளம் தான் இந்த
"சிரட்டையும் மண்ணும்".

எமது மலேசியா பயண நினைவுகளில் ...

எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் எமதான மலேசியா பயணம் முடிவாகியது இது இலங்கை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இடமிருந்து வலமாக.-ஹிசாம், நாச்சியாதீவு பர்வீன், வசீம் உஸ்மான், மற்றும் அஸ்வர்,.

டொமினிக் ஜீவா என்ற அற்புத மனிதர்.

டொமினிக் ஜீவா மூத்த எழுத்தாளர் கே.டானியல்யைப் போலவே பஞ்சமர் இலக்கயத்தை ஓர்மையுடன் படைத்தவர் இவரது தண்ணீரும் கண்ணீரும் சிறுகதை தொகுதிக்கு இலங்கையின் சாகித்திய மண்டல பரிசு கிடைத்தது, இவரது அயராத அர்பணிப்பின் பயனாக மல்லிகை எனும் மசிகையை சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களாக தனியாள்முயற்சியாக வெளியிட்டு வருகிறார், எண்பத்தி மூன்று அகவையிலும் சுறு சுறுப்பு மாறாத இளைஞ்சனாக இலக்கிய மேடைகள் தோறும் இவரைக் காணலாம் , எளிமையும், அன்பும், பக்குவமும் நிறைந்த இந்த அற்புத மனிதர் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் சக எழுத்தாளர்களை கணம் பண்ணவும், இளைய எழுத்தாளர்களை தட்டிக்கொடுக்கவும் என்றும் இவர் பின்நின்ற தில்லை, சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கியம் படைத்தது வரும் இவர் பற்றிய ஆய்வுகள் எதிர் காலத்தில் மேம்படும் என நம்பலாம் -முடிந்தால் புதிய கதிரேசன் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை சந்த்தித்து கொஞ்சம் உரையாடிப் பாருங்களேன் கட்டாயம் தொலை பேசி மூலம் அவருடன் பேசி விட்டு போவது நல்லது -0112320721

வியாழன், 24 செப்டம்பர், 2009

மரியம் என்ற மலர்.


இது எனது கவிதை
ஒரு வண்ணத்தி சிறகினிலும்
மென்மையான அதரம் கொண்ட
என் தேவதை இவள்.
ஒரு சின்ன பனித்துளியை
தழுவிக்கொள்ளும் மென் இதழ்
பூவாக என் நஸ்மியா வின்
அரவணைப்பில் என் மரியம்
உறங்கும் அழகே தனிதான்.
எந்த அழகு பற்றிய கணிப்பும் இப்போது
என்னிடம் இல்லை என் மகள் மரியத்தை
தவிர,....

எனது மலேசியா பயணத்தில்...


எழுத்தாளர் சை.பீர் முஹம்மது உலக தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கு அறியப் பட்டவர் மலேசியா வின் அடித் தட்டு மக்களின் வாழ்க்கை பிரச்சினை களை தனது படைப்புகள் கூடாக வெளிக்கொண்டு வந்ததவர் அண்மையில் நானும் எனது நண்பர்களான அஸ்வர் , வசீம் அக்றம், ஹிசாம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மலேசியா வுக்கு பயணம் செய்த நேரத்தில் நண்பர் திரு , ஞானசேகரன் அவர்களின் உதவியினால் நண்பர் சை. பீர் முஹம்மது அவர்களை சந்தித்து உரையாடினேன் நானும் நண்பர் ஹிசாம் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே அவரை சந்தித் தோம் , எளிமையான மனிதர், இலங்கை எழுத்தாளர் கள டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா, மேமன் கவி , ஞானசேகரன்,ஜின்னா சரிபுடீன், என்பவர் களை பற்றி விசாரித்தார், அவரது அண்மைய சிறுகதை தொகுப்பான "பயஸ் கொப்காரனும் வான்கோழிகளும்" அன்புடன் கையளித்தார், உலக தமிழ் இலக்கிய பரப்பில் ஆராயப்பட வேண்டிய படைப்பாளிகள் வரிசையில் மலைசிய சை.பீர் முஹம்மதும் குறிப்பிட்டு கூறக்கூடியவர்.

நாச்சியாதீவு பர்வீன்,

பழக இனிமையான மனிதர் மேமன்கவி



மேமன்கவி 1970 களில் ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் கவிஞ்சனாக அறிமுகமாகி தனது தணியாத தேடலின் பயனாக இன்றுகளில் தமிழ் இல்லக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கணிக்கப் படுகிறார்.


ஹிரோசிமாவின் ஹீரோக்கள், உனக்கெதிரான வன்முறை, மீண்டும் வசிப்பதற்காக, யுக ராகங்கள், இயந்திர சூரியன், நாளையநோக்கில் இன்றில் என்பன இவரது கவிதா விலாசங்களை அடையாளப் படுத்த வல்ல படைப்புகள் ஆகும். இவரது தொடர்பு களுக்கு -௦785128804


எனது புதிய அறுவடை.

வாசித்துப் பாருங்கள் என் சார்ந்த உணர்வுகளை நீங்களும் உணர்வீர்கள். எனது கத்தார் வாழ்க்கை இல் நான் பெற்ற அனுபவங்களை எனது மொழி இல் சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு மொழி பெயர்க்க முடியாத புத்தகம் இருக்கும் நிறையப் பேருக்கு அதை சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம் இருக்குமே தவிர அதை சொல்லும் வழி தெரிவதில்லை இப்படித்தான் எனது சிறுவயது நினைவுகள் எனது நண்பர்கள் அவர்களுடனான எனது அனுபவம் எனது பாடசாலை நினைவுகள் என்னை நேசித்தவர்கள், நேசிக்க மறந்தவர்கள் என்று சிலவிடயங்களை பரிட்சார்த்தமாக இதில் பதிந்துள்ளேன்.

எனது மகள் மரியம்


எனது மகள் மரியம் பிறந்த போது எனது பேனா வழியாக இறங்கிய உணர்வுகள் தான் இவை, 23/05/2009.

அன்று இந்த மண்ணில் மலர்ந்த மலர்தான் எனது மகள் மரியம்.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by