Related Posts with Thumbnails

திங்கள், 23 செப்டம்பர், 2019

பத்தி எழுத்து



சுதந்திர நாட்டின் அடிமைகள்.

நாச்சியாதீவு பர்வீன்.



இன்னொரு இனமுறுகலுக்கான உச்ச கட்ட முஸ்தீபுகளை ஞானசார மேற்கொண்டு வருகிறார். பேரினவாத சக்திகளின் அடக்கி ஆளுகின்ற மனோபாவத்தின் விளைவே இது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் அல்லது தமிழ் பேசுகின்ற சமூகத்தை நசுக்கி ஒரு அடிமைச்சமூகமாக வைத்துக்கொள்ள முனைகின்ற ஒரு போக்கு தொடர்ச்சியாக உணரப்பட்டு வருகின்றது.

தமிழின் தொன்மைக்கு முன்னால் சிங்களம் அழிந்து போய்விடும் என்ற மனப்பயத்தில் சிங்கள மொழிபேசுகின்ற சமூகத்தை ஒரு இருண்மைக்குள் வைத்துக்கொள்ள முனைகின்றது பேரினவாத சக்திகள்.

பௌத்த மதத்தின் நேர்மையான உபதேசங்களை மறந்து குரோதத்தையும், முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதில் ஞானசார, அத்துரலியத்த போன்ற பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்படுகின்றனர். அவர்களை பொருத்தமட்டில் தமிழ் பேசுகின்ற சமூகத்தை அடக்கி ஆள வேண்டும். இந்த  மனோநிலையை அப்பாவி சிங்கள மக்களின் மத்தியில் விதைத்து  வருகின்றார்கள்.

இந்த நிலை மீண்டும் ஒரு கொடூர யுத்தத்தை நோக்கி தமிழ் பேசும் சமூத்தை தள்ளிவிடுமோ என்கின்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அகிம்சையும், சமாதானமும் விட்டுக்கொடுப்பும் வெறுமனே மத அநுஸ்டானங்களில் மாத்திரம் பேசப்படுகின்ற போதனையாக மாறிவிட்டதை அவதானிக்க முடிகிறது. இந்தநிலை தொடர்வது ஆரோக்கியமானதல்ல.

சட்டமும் நீதியும் பொதுவானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இருக்கவேண்டும். மதநல்லிணக்கத்தை காவுகொள்கின்ற முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் கோவில்  முன்றலில் தேரரின் பூதவுடல் தகமானது நீதித்துறைக்கே விடுக்கப்பட்ட சவாலாகும். ஞானசார போன்ற கடும் போக்கு மனோநிலையுடைய பௌத்த தேரர்களிடம் அன்பையும், கருணையையும், அகிம்சையையும் எதிர்பார்க்க முடியாது.
நாம் அவர்களுக்கு அதனை ஊட்டவும் முடியாது.

இந்த அழகிய தேசத்தை இவ்வாறான ம(ன)த நோயாளர்களிடமிருந்து காப்பாற்றும் மாற்று சக்தியின் அடையாளம் இன்னும் தென்படவில்லை. அரசியல்வாதிகளின் சீறற்ற நகர்வுகள், கதிரைக்கான போட்டிகள் இனவாத பேய்களை ஒருபோதும் விரட்டப்போவதில்லை. கோட்டா, சஜித், அநுர இவர்களின் பெயர்களும் உருவங்களும் மாத்திரமே வித்தியாசம். மனோநிலை ஓரளவு ஒன்றாகவே காணப்படுகின்றன.

நமது அடுத்த பரம்ரையும் இந்த நாட்டில் நிம்மதியற்ற கொதிநிலை வாழ்க்கையைத்தான்  அநுபவிக்கப்போகுகிறது என்பது கசப்பான உண்மையாகும். தமிழ் பேசும் ஒரு இனத்தின் ஒற்றுமை தமிழ்- முஸ்லிம் உறவின் வலுவான கட்டமைப்பு என்பன சிங்கள அரசிடம் தனித்துவமான பேரம் பேசலுக்கான சாளரத்தை சிறுபான்மை சமூகத்திற்க்கு திறந்துவிட வாய்ப்புள்ளது.

அதுவரைக்கும் நாம் சுதந்திர நாட்டின் அடிமைகள் தான்.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by