Related Posts with Thumbnails

திங்கள், 16 ஜூலை, 2012

இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வகத்தின் முதலாவது மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வும் நினைவும்.

ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன் அவர்களின் தலைமையில் வெள்ளவத்தை 42 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள பிரின்சஸ் அகடமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது சிறப்பு அதிதியாக புரவலர் அல்ஹாஜ் அப்துல் கையூம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்புரையாற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரகுபரன் அவர்களும் மீள் பார்வை ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சிராஜ் மஹ்சூர் அவர்களும் வருகை தந்திருந்தார்கள்.இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட 35 பேர்களில் 30 பேர் கலந்து கொண்டனர். மேமன்கவி, அல்அசுமத், அமல்ராஜ், சுஹைதா கரீம், ஷர்மிலா செய்யித்,நாச்சியாதீவு பர்வீன், நியாஸ் ஏ. சமத், நேகம பிஸ்ரின் முஹம்மது முபாரக் மௌலவி, முர்சிதீன், சட்டத்தரணி மர்சூம் மவ்லானா, அத்னான், அஸ்ரப் சிஹாப்தீன், தினக்குரல் நிலாம்,மவ்லவி காத்தான்குடி பவுஸ்,தம்பு சிவா, மதுசூதன், கே.பொன்னுத்துரை, அந்தனிஜீவா, தி.ஞானசேகரன், ஒகே,குணநாதன் உட்பட பலர்

கலந்து கொண்டனர். நிகழ்வின் நன்றி உரையை ஆய்வகத்தின் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் நிகழ்த்தினார்.

பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.
 
யாத்ராவின் பிராதான ஆசிரியரும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீனின் கலகலப்பான நன்றி உரையின் போது.

இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வகத்தின்

தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன், சிறப்பு அதிதி புரவலர் அல்ஹாஜ் அப்துல் கையூம், தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரகுபரன் ஆகியோரை படத்தில் காணலாம்.

பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.
 
 
 
     காப்பியக்கோ ஜின்னாஹ் புரவலரை சால்வை போர்த்தி கவுரவிக்கின்றார்.

மீள் பார்வை ஆசிரியர் சிராஜ் மஹ்சூர் மத்திய கிழக்கு அரசியல் பற்றிய இலங்கை முஸ்லிம்களின் பார்வை. எனும் தலைப்பில் உரையாற்றிய போது.


இப்போதெல்லாம் நன்றியுள்ளவர்களை காண்பது அரிதாகவே உள்ளது எனவே தான் நன்றி உரையை நடுவில் பதிவிட்டுள்ளேன், என்னடா இவன் நன்றி உரையை முதலில் போட்டுள்ளான் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதில் போதுமென்று நினைக்கின்றேன்.









 
 

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by