Related Posts with Thumbnails

செவ்வாய், 10 ஜூலை, 2012

சுய விசாரணை

நமது எண்ணமும் எழுத்தும் நமது சுய சிந்தனையின் அடிப்படையிலேயே அமைக்கிறது, அதை நாம் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் நமது கருத்தை அல்லது விருப்பத்தை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கை ஆகும், தனிமனித இரசனைக்கு ஏற்ப மாறுபட்ட இயல்புகளையும், அவதானங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் மனிதன் கொண்டுள்ளான் அந்த வகையில் வெவ்வேறு சிந்தனைகள் உள்ளவர்கள் நம் மத்தியில் வாழ்கின்றார்கள், ஒருவருக்கு பிடிப்பது மற்றவருக்கு பிடிப்பதில்லை, ஒருவர் சிறந்தது எனக்கருதுவது இன்னொருவருக்கு படுகேவலமாகவும் பட வாய்ப்பிருக்கின்றது,



இந்த கருத்து முரண்பாடுகள் நல்ல நண்பர்களையும் எதிரிகளாக்கி விடுகின்றன, நெகிழ்வுத்தன்மையும், புரிந்துணர்வும் அற்ற ஒரு சமூகத்தில்

வாழ்கின்ற போதுகளில் வெகு நிதானமாக காய் நகர்த்த வேண்டியுள்ளது, நம் எதிரிகளிலும் பார்க்க நமது நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, நண்பர்கள் எதிரிகளாகும் போது ஏற்படுகின்ற சிரமங்களை அனுபவித்த நபர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது,

எல்லோரையும் நேசிக்கும் படியே எல்லா மதங்களும் சொல்கின்றன நேசிப்பதில் உள்ள சிந்தனை சிக்கலினால் சிலர் முறை தவறி நேசிக்க விளைகின்றனர், இது பாரிய பின் விளைவுகளை உண்டு பண்ணுகின்றன நாம் என்பது நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ளவர்களும்

தான் இது பற்றி யாரும் சிந்திப்பது இல்லை , அநேகமானவர்கள் சுய நலமுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்,

நம்மை சுற்றி நல்லவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அவர்களை அடையாளம் காண்பது தான் பிரச்சினை...

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by