Related Posts with Thumbnails

புதன், 6 ஜனவரி, 2016

கவிதை- ஒரு மறு வாசிப்பு



நாச்சியாதீவு பர்வீன்.

ஒரு நல்ல கவிதை மனதிற்க்கு  மருதாணி போட்டு அழகாக்கின்றது, நம்மை நாமே மறு வாசிப்பு செய்வதற்க்கும் , நமதான கவிதைபுலமையை உரசிப்பார்ப்பதட்க்கும் கவிதை வாசிப்பானது மிக அவசியமான ஒன்றாக ஆகிப் போய் விட்டது சில கவிதைகள் எத்துனை வாசித்தாலும் எனக்கு விளங்குவதே இல்லை அந்த கவிதை எழுதிய கவிஞர்களிடம்  அதற்கான விளக்கம் இல்லை ஆனால் அந்தக் கவிதைகளை விளங்கிக் கொள்ள ஆழமான கவிதை வாசிப்பும்  கவிதை பற்றிய அறிவும் அவசியமாம்?  பாரதி அவனுக்கே இந்தக்கவிதைகள் புரிந்திருக்குமா என்று யோசித்துப் பார்த்தால் அதுவுவும் சிக்கலாகத் தான் இருக்கிறது, இன்று கவிதையின் வடிவம் வெறும் சொல்லடுக்குகளால் பின்னப்பட்ட  கோர்வைகளாகிப் போய்விட்டதாக ஆதங்கப் படுகிறார் நா.காமராசன்  அதுவும் உண்மையில்லாமல்  இல்லை வெறும் சொல்லடுக்குகளை கவியாக பிரவகித்துக் கொண்ட காலாமாக வானம்பாடிகளின் காலத்தையும் சிலர் அடையாளப்படுத்துவது உண்டு ஆனால் வானம்பாடிகளின் காலத்தில் புதுக்கவிதை புதுப் பாய்ச்சலுடன் தனக்கான ஒரு பாதையில் அடையாளப்படுத்தப் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது , கவிதையின் வடிவம் கால மாற்றத்தோடு பாரிய மாற்றங்களை கொண்டுள்ளது அந்தவகையில் செய்யுள் ஆக இருந்து- இன்று புதுக்கவிதைப் பாணியில் விளங்காக் கவிதை வரை அதன் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது எனலாம் செய்யுளை மக்கள் புரிந்து கொள்வதில் இருந்த சங்கடம்தான் மரபில் எளிமையும் புதுக்கவிதையும் தோன்றுவத்ட்க்கு காரணம் ஆகும்,  அந்த வகையில் இடையில் குறுங்கவிதை, நெடுங்கவிதை , வசனக்கவிதை, போன்ற பெயரிலேயே கவிதைகள் வலம் வந்தன இன்னும்  ஜப்பானிய கவிதை வடிவான ஹைக்கூ கவிதைகளும் விடுகதைப் பாணியிலான கவிதைகளும் வெளிவந்தன  இவைகள் அந்த அந்தக் காலங்களில் பிரபல்யமாக பேசப்பட்டதும்   உண்டு மந்திரச் சொற்களால் வாசகனை வளைத்துப் போடும் வரிகளுக்கு ஒரு தனியான இடம் இருக்கிறது சில மூத்த கவிஞர்கள் இதனை வெறும் சொல்லடுக்கு என்கிறார்கள் இன்னும் சிலர் ஆஹா இது அற்புதமான கவிதை என்கிறார்கள் ஆக வாசகனை தெளிவாக  குழப்புவதில் இந்த இருசாராரும் வெற்றி பெறுகிறார்கள்.

கவிதைபற்றிய இவ்வளவு ஆராய்ச்சி எதட்கேன்றால்   சில கவிதைகள் அல்லது வரிகள் வாசித்த மாத்திரத்திலேயே நம்மை வளைத்துப் போட்டுவிடுகின்றன அந்த வகையில் சில வரிகளை நான் பகிர்ந்து கொள்கிறேன் இது கவிதையா அல்லது வெறும் சொற்கள் கொண்ட  சித்திரங்களா என்பதெல்லாம் யான் அறியேன் ஆனால் எனது கவிதை பற்றிய சின்ன அறிவுக்கு இவைகள் நல்ல கவிதைகலாவே படுகிறது..நீங்களும் கொஞ்சம் வாசித்து பாருங்கள்...

நள்ளிரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவில்லை

என்று இந்திய சுதந்திரத்தைப் பற்றி கவிக்கோ அப்துர் ரஹ்மானின் சிஷ்யர் ஒருவர் பாடியுள்ளார்  இது திறனாய்வாலர்களால் அற்புதமான கவிதை என்று அடையாளப்படுத்தப் பட்ட போதும் சிலர் இது கவிதையே இல்லை என்கிறார்கள் புதுக் கவிதைக்கான மிகக் காத்திரமான கட்டமைப்ப உருவாக்கியவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவரது சிஷ்யர் எழுதியதால் தான் இது கவிதையாக கொள்ளப்படுகிறது என்கிறது  இன்னொரு வாதம் ஆனால் ஒரு நாட்டின் சுதந்திரம் பற்றி நொந்து போய் இத்தனை இலகுவான  மொழிநடையில் யாரும் கவிதை யாத்துள்ளார்களா? என்பது தெரியாத விடயம் .

கவிதை என்றால் என்ன?  என்று யாரும் கேட்டால் என்ன பதில் சொல்லுவது கேட்பவருக்கு பதில் சொல்வதை விடவும் நல்ல கவிதை ஒன்றை அடையாளப் படுத்தி இதுதான் கவிதை என்று கொடுக்க முடியும் அந்த வகையில் மேற்சொன்ன கவிதையானது பலராலும் விதந்துரைக்கப்பட்டது... இதே பாணியில் இன்னொரு கவிதை

வெள்ளையனிடம் வாங்கினோம்
கொள்ளையனிடம் கையளித்தோம்

இதுவும் ஒரு இந்திய கவிஞரால் எழுதப்பட்டதுதான் இது கவிதையா? அல்லது வெறும் சொல்லடுக்கா ? என்ற ஆராய்ச்சிகளையும் தாண்டி
இது வெறும் இந்தியாவை மட்டும் சுட்டுவதாக இல்லை மாறாக வெள்ளையர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்று இன்று மட்டுக்கும் ஊழல் நிறைந்த அரசுகளினால் ஆளப்பட்டுக்கொடிருக்கின்ற நாடுகளுக்கான பொதுவான வாசகம் இந்த வரிகள் அநேகமானவர்களுக்கு பிடித்துள்ளது எனக்கும் தான் இப்படி பல குறுங்கவிதை என்ற பெயரிலேயே வானம்பாடிகளின் காலத்தில் கோஷங்களாகவும், எதுகை மோனைகளுடனான வார்த்தை வருடல்கலாகவும் வெளிக்கிளம்பின

இவ்வாறே ..............

எமக்கென்று  எஞ்சுவதெல்லாம்
இரக்கமில்லாத உறவுகளும்
உறக்கமில்லாத இரவுகளும்

இந்த வரிகளின் ஆழம் அல்லது கவர்ச்சி என்னை மிகவும் கவர்துள்ளது இதை யார் எழுதினார் என்ற தகவல் தெரியாவிட்டாலும் இது கவிதையா அல்லது வெறும் சொற்கள் கொண்ட  சிலம்பமா என்ற வாதங்களையும் தாண்டிய கவித்துவமான வரிகளாகவே இதனை கொள்ள முடிகின்றது இதனை வாசித்து மாத்திரத்திலேயே ஆஹா என்று சப்புக்குக் கொட்டும் வாசகனை  நம்மால் காண முடியும் இதற்க்கு கவிதைபற்றிய வெறும் மேலுந்தவாரியான ரசனை போதுமானதாகும் பாமரர்களையும் கவர்கின்ற வகையில் அவர்களுக்கு விளன்க்கும் இலகு நடையில் கவிதை எழுதுவது அவர்களை அந்தக் கவிதை சென்றைடைய மிக இலகுவான வழியாகும் இந்த உயரிய பணியை சினிமாப்பாடல்கள் மூலமாக கவிஞர்களான கண்ணதாசன், வாலி, மு.மேத்தா, ந.காமராசன், வைரமுத்து ஆகியோர் செவ்வனே செய்துள்ளனர்

இன்றைய கவிதைச் சூழல் மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளதாக கருதப்படுகிறது ஏனென்றால் ஒரே சொல்லையும் ஒரே வார்த்தையையும் வைத்து கவிதைபன்னிய பலர் இப்போது இல்லாமல் போய்விட்டனர் புதிய இளம் தலைமுறைபடைப்பாளிகளின் தேடல் உத்வேகம் புலமை என்பது புதிய கோணத்தில் கவிதை உலகத்தை தரிசிக்க வைக்கிறது
அந்தவகையில்

வானம்
அது வெள்ளை
நிலா அது இரவில் வரும்
மேகம் அது உன் கூந்தல்
பூ உன்னிடம் வாசத்தை
கடன் வாங்கியதா?    

என்ற பாணியிலான முதலாம் ஆண்டுப் பாடப்புத்தகத்தைப் மனப்பாடம் செய்த மாதிரியான்  சொற்களை இன்னும் சிலர் எழுதிக் குவித்து வேருப்பெற்றுக்கின்ற்றனர் பின்னாலும் முன்னாலும் பெரிய பட்டங்கள் வேறு இவர்களிடம் நான் வினயமாக கேட்டுக் கொள்வது...கவிதை என்ற பெயரில் பாடப்புத்தகங்களில் உள்ளதை பார்த்து எழுதாதீர்கள்.
நான் வாசிக்கின்ற ஒரு காத்திரமான கவிஞர் யாழ் ஜன்சி கபூர் அனுராதபுரத்திலுள்ள இவரின் கவிதைகள் சுருகென்று மனதை தைத்து சோகத்தை தரக்கூடியது இன்றுகளில் முகப் புத்தகத்தில் வெகுவாக கவிதைமூலம் பிரகாசிக்கும் இவரது அண்மைக்காலக் கவிதை ஒன்று என்னளவில் மிகவும் ரசிக்கக் கூடியதாகவும் வித்தியாசமானதாகும் இருக்கின்றது

என் விழிக்குள் இறங்கிய
உன் பார்வை
வாந்தியெடுத்தது காதலை..

காதல் பற்றிய மிக ஆழமான அவதான  குறிப்பு காதலை வெகு லாவண்யமாக சொல்லும் பங்கும் காதல் தோல்வியை உருகி வெளிப்படுத்தும் ஆளுமையும் ஜன்சி கபூரின் தனித் தன்மை
சின்ன சின்ன கவிகளை அலுக்காமல் வாசிக்க முடியும் அது வெறும் சிள்ளடுக்கு களாக இருந்தாலும் சில வேளைகளில் வாசகனை கவர்ந்து விடுகிறது ....

இப்போதுகளில் முகப் புத்தகத்தில் அநேகமான பல நல்ல கவிதைகள் வருகின்றன அதிலும் பஸ்லி ஹமீட் இன் கவிதைகள் வெகு பிரமாதம்

அழகு என்கிறார்கள்
கறுப்பு மை
வெள்ளைக் காகிதத்தில்
சிந்தும் போது
ஆனால் அசிங்கம் என்கிறார்கள்
கறுப்பு என்னுடன்
வெள்ளை நீ இருக்கும் போது

இந்த வரிகளையும் தாண்டிய இரண்டு வரிக்கவிதைகள் பல எழுதியுள்ளார் இவரின் பல கவிதைகள் படத்துடன் முகப்புத்தகத்தில் வலம்வருவது குறிப்பிடத்தக்கது..இன்னும் பல நல்ல இளம் கவிஞர்கள் தம்மை அடையாலப்படுத்தியுள்ளார்கள்  அமல்ராஜ் ,அமுதன், சிஹார், சிபான்,ராஜு சுகா, பிரகாசகவி அன்வர், ஜெம்சித் சமானம்,ரிஷான் செரீப், சிப்லி, லுணுகலை ஸ்ரீ   இவர்களெல்லாம் முகப் புத்தகத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர்களில் சிலர்.இன்னும் பலர் உளர்

கவிதை  உலகம் மிகவும் விரிந்தது, கவிஞனின் பார்வையும் இந்த பரந்த கவிதை உலகம் முழுக்க பரவ வேண்டும், அப்போது தான் நல்ல கவிதைகள் எழும், எழுத முடியும்.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by