Related Posts with Thumbnails

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இந்திய பயண அனுபவம்..

அனுபவம் அலாதியான பாடங்களை கற்றுத்தருபவை, மட்டுமல்ல மகிழ்சியான
நிகழ்வுகளாகவும் அமைந்து விடுகிறது..இந்த வகையில் எனதான இந்திய பயண
அனுபவத்தை கட்டுரை ஆக்கியுள்ளேன்...
மலேசிய இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ள மிக ஆவலாக இருந்தேன் அது தொடர்பாக டாக்டர் தாசிம் அஹமது அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர் அன்வர் என்பவரின் மொபைல் நம்பரை தந்து.. அவருடன் பேசி பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் அவரோடு தொடர்பு கொண்டு கதைத்த போதும் வெற்றி கரமாக அந்த பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை எனவே இந்தியப் பயணத்தில் எப்படியாவது கலந்து கொள்ளவேண்டும் என்ற.. முனைப்பில்..பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய பணத்துடன் காத்திருந்தேன்..என்னோடு மனைவி நஸ்மியாவும் மகள் மரியமும் வருவதாக இருந்தார்கள் , இதுபற்றிய மேலதிக விபரங்களுக்காக கவிஞர் அஸ்ரப் சிஹாதீன் அவர்களை தொடர்பு கொண்ட போது... விமானத்தில் செல்வதானால் கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீனை தொடர்புகொள்ளுமாறும்
கப்பலில் செல்வதானால் மானா மக்கீன் அவர்களை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் நான் விமானப்பயணத்தயே முதலில் விரும்பினேன் ஆனால் சென்னையிலிருந்து காயல்பட்டினத்திட்கு சுமார பத்து மணிநேர பஸ் பயணம் என்றதும் தூக்கிவாரிப்போட்டது வெறும் நாலு மணிநேர பஸ் பயணத்தின் போதே மனைவிக்கு சத்தி பலதடவை வந்துவிடும் பத்து மணிநேர பஸ் பயணம் என்றால் நினைக்கவே பயமாக இருந்தது..விடயத்தை
கவிஞர் ஜின்னஹ்விடம் சொன்னேன் appadi என்றால் நீங்கள் கப்பலில் வருவது தான் நல்லது என்று.. மானா மக்கீன் அவர்களின் தொடர்பு இலக்கத்தையும் தந்தார் மானா மக்கீன் அவர்களுடன் தொடர்பினை மேற்கொண்டேன் சுமார் அரைமணி நேரம் கதைத்தார் பழையது பலதும் பத்தும் ஆனால் கண்டிப்பாக ஒரு
விடயத்தை முன்வைத்தார் அதாவது பெண்கள் வருவதை காயல்பட்டின ஏற்பாட்டு குழுவினர் விரும்ப வில்லை என்றும், பெண்களுக்கு தங்குமிட வசதி செய்வதில் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அசவ்கரியம் இருப்பதாகவும் மனைவியையும் மகளையும் கூட்டிக் கொண்டு வர வேண்டாம் என்றும் கூறினார் அவர் சொன்னதில் உண்மை என்று nampinen இருந்தும் கவிஞர் ஜின்னஹ்விடம் இது பற்றி கேட்டபோது எனக்கு இப்படி ஒரு அறிவித்தலை ஏற்பாட்டு குழுவினர் தரவில்லை என்றும் நீங்கள் தாராளமாக மனைவி யையும் மகளையும் கூட்டிக் கொண்டு வரமுடியும் என்று தெளிவாக சொன்னார், ......maanaa makken அவர்களை
மீண்டும் தொடர்பு கொண்டேன் ..
hallo..சார்...
சொல்லுங்க...
சார் நான் நாச்சியாதீவு பர்வீன் பேசுதேன்..
சொல்லுங்க நான் வேறே ரெண்டு லைன் ல பேசிட்டு இருக்கேன் ....
அப்ப நான் பிறகு எடுக்கேன் சார்
இல்ல இப்பவே பேசுங்க பிறகு என்ன புடிக்க முடியாது
இப்பவே நேரத்த எடுத்திட்டீங்க குரல் டென்சனாக வருகிறது.. என்னடா இது ரெண்டு naalaikku முன் nalla pesiya manusan இண்டைக்கு இப்படி எகிருறாரே.. இவரோட பயணம்
செய்தா... அந்த பயணம் உருப்படுமா ?


1 கருத்துகள்:

nazeer 7 அக்டோபர், 2011 அன்று AM 10:49  

ungal kanawaaha iruntha antha ninaivuhal nanawaahappoonapothu ithanai waalvil marakka mudiyaathuthaan... aanaal ithanai naanum vaanoliyil ilankayil irtunthu thantha wadivam inthiyaavilirunthu tharuwathu pooulirunthathaaha palarum paaraattinathaaha nanpargal sonnaarhal ungal payana anupawangalai innum thodara nirayya neyarhal vaasaharkhal ict therinthawarhal ellaam iniththaan karuththurai tharuwaarhal... thodarha thuoolaa...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by