Related Posts with Thumbnails

புதன், 11 ஆகஸ்ட், 2010

நோன்பு ஏன்............?

நோன்பு என்ற சொல்லுக்கு விரதம் என்றும் சொல்லுவார்கள், ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு காரணங்களுக்காக நோன்பு நோற்பது வாடிக்கையான ஒரு விடயமாகும், அந்த வகையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரமலான் (அரபு மாதம்) மாதத்தில் விருப்பத்தோடும், ஆர்வத்தோடும் நோன்பு நோற்பதன் தாத்பரியம் என்ன? நோன்பினால் ஏற்படும் தனிமனித, சமூக நன்மைகள் யாவை? இப்படி பல கேள்விகளுக்கு நமக்கான பல நூறு பதில்களை அள்ளித்தருகிறது இஸ்லாம் மார்க்கம் அதில் மிகவும் எளிமையான சில காரணங்கள் தான் ஏழை எளியவர்களின் பசியை பணக்காரர்களும் உணர்த்து கொள்ளுதல் இதன் மூலம் பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு உத்தவுவத்தட்கு ஏதுவாக அமைகிறது,அத்தோடு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த ஒரு மாத காலத்திற்கு நோன்பு நோற்கின்ற போது சமூக ஏற்றத்தாழ்வு அங்கே இல்லாமல் போகின்றது, இந்த நோன்பின் போது மனிதன் தனது புலன்களை அடக்கியாளும் பயிற்ச்சியை பெறுகிறான், வீண் பேச்சுக்கள், உண்ணல், உறங்கள்,போன்ற வற்றிளிருந்து தவிர்ந்து நடக்க இந்த நோன்பு காலம் மிகுந்த
பயிட்சியை அளிக்கின்றது அந்த வகையில் நோன்பின் பலன்கள் மிக மிக அதிகமாகவுள்ளது . இந்த பயன்களை முஸ்லிம்கள் உணர்ந்து நோன்பு நோற்பது சாலப்பொருத்தமாகும்.

2 கருத்துகள்:

Riyas 18 அக்டோபர், 2010 அன்று PM 7:57  

HI FARVIN,

இப்போததான் உங்கள் பார்க்கறேன்.. லோசனின் தளத்தில் மேய்ந்த போது உங்கள் கமெண்ட் பார்த்தேன்.. நாச்சியாதீவு என்றிருந்தது அட நம்ம ஏரியா.. உடனே உங்கள் தளம் வந்து பார்த்தேன் ஏன் தொடர்ந்து எழுதவில்லை..

முடிந்தால் என தளத்துக்கும் வந்து பாருங்கள்..
http://riyasdreams.blogspot.com/

நாச்சியாதீவு பர்வீன். 19 அக்டோபர், 2010 அன்று AM 2:30  

ரியாஸ், நீங்கள் எந்த ஊரு? அனுராதபுரமா? நல்லா கவிதை எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by