நானும் ரவடி தான்
தலைப்பை பார்த்து யாரும் மெய்யாலுமே இவன் ரவுடி தான் என்று நினைத்து விடாதீர்கள்-க்கும் நெனச்சிட்டாலும் என்று நீங்க நினைப்பது கேட்கிறது எப்படியோ மீண்டும் இந்த பகுதிக்கு எட்டிப்பார்க்கும் எண்ணத்தை ஊட்டியவர் அஸ்ரப் சிஹாப்தீன் அவர்கள் ப்ளாக்கர் ஆரம்பித்த காலங்களில் மிகவும் சீரியசாக எழுதியவன் அடியேன் பின்னர் முகநூலுக்குள் முடங்கிக்கிடப்பர் போனதால் இந்தப்பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை, தேங்கிய சாக்கடை போல ஆகிப்போய்விட்டது இந்தப்பகுதி, ஆனால் சிரேஷ்ட எழுத்தாளர் அஸ்ரப் சிஹாப்தீன் எவ்விதமான அலட்டலோ,அலம்பலோ இல்லாமல் தனது பக்கத்தை செவ்வனே செய்து வருகின்றார், யாருக்காகவும்,எதற்காகவும் அவரது பக்கத்தையும் எழுத்தையும் அவர் தொய்வாக்கி விடவில்லை அதுதான் அவரது பலம் ................அவர் முகநூலில் இட்ட பதிவொன்றின் தாக்கம் தான் இந்த மீளப் பிரவேசம்........இனி இந்தப் பக்கத்தை தொடரவுள்ளேன்