நமது நட்புப் பற்றி
ஒரு அறுகம்
புல்லிலும் மென்மையான
நமது நட்பு பற்றி
இன்னும் எனது
கண்ணீர் துளிகள் பேசுகின்றது.
எல்லோருக்கும்
உன்னைப் போலேவே
அன்பும் மென்மையும்
நிறைந்த நண்பன் கிடைப்பதில்லை
அந்த வகையில்
நான் அதிஸ்டக்காரன்.
எந்தத் துர்தேவதையின்
சாபம் நம்மைப் பிரித்தது
ஒவ்வொரு விடுமுறையும்
நம் கிராமத்தை
தரிசனம் செய்யும்
தருணங்களில் ...
உன்னை தேடி அவாவும்.
என் கண்கள்
வெறுமை கலந்த
ஏமாற்றத்துடன் திரும்புகிறது..
வாழ்க்கைப் பாரத்தை
இறக்கிவைக்க
நீ ஒரு திசையில்
நானொரு திசையில்
எல்லாம் முன்னேற்றம்
அடைந்து விட்ட போதும்
இன்னும் நமது முகவரிகள் மட்டும்
மூடியே கிடக்கின்றது.
நாம் அறியாமல்.
நாச்சியாதீவு பர்வீன்.
armfarveen@gmail.com.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக