இரவுத் திருடன்.
பின்னேரத்தின் வெளிச்சம்
அருகிப் போய்
இருள் கவ்வத் தொடங்கியது
பூமியை.......
குருவிகளினதும் காக்கைகளினதும்
இரைச்சல் ஒலிஅடங்கிப் போய்
வெகு நேரம் ஆகிப் போனது
மரங்களின் ஆட்டம் இல்லை
மனிதர்களின்
நடமாட்டம் இல்லை
எல்லா உயிரினங்களும்
உறங்கிப் போய்
வெகு நேரமாகிப் போனது,
இரவின் காதலன்
சந்திரன் மட்டும்
நட்சத்திர நண்பர்களோடு
வானத்து தெருக்களில்
பவனிவந்தான்...
ஊர் உறங்கிப் போனதை
உறுதிப் படுத்திக் கொண்ட
அந்தத் திருடன் களத்தில்
குதித்து விட்டான்...
இன்று யார் வீடோ..
ஆனால் இவனது
எல்லா திருட்டுகளையும்..
வழமைபோலவே
ரசித்துக் கொண்டிருந்தனர்..
மெல்லிய இருளும்..
மேகக் கூட்டங்களும்
சந்திரனும்..
அவன் சகாக்களும்..
நாச்சியாதீவு பர்வீன்.
அருகிப் போய்
இருள் கவ்வத் தொடங்கியது
பூமியை.......
குருவிகளினதும் காக்கைகளினதும்
இரைச்சல் ஒலிஅடங்கிப் போய்
வெகு நேரம் ஆகிப் போனது
மரங்களின் ஆட்டம் இல்லை
மனிதர்களின்
நடமாட்டம் இல்லை
எல்லா உயிரினங்களும்
உறங்கிப் போய்
வெகு நேரமாகிப் போனது,
இரவின் காதலன்
சந்திரன் மட்டும்
நட்சத்திர நண்பர்களோடு
வானத்து தெருக்களில்
பவனிவந்தான்...
ஊர் உறங்கிப் போனதை
உறுதிப் படுத்திக் கொண்ட
அந்தத் திருடன் களத்தில்
குதித்து விட்டான்...
இன்று யார் வீடோ..
ஆனால் இவனது
எல்லா திருட்டுகளையும்..
வழமைபோலவே
ரசித்துக் கொண்டிருந்தனர்..
மெல்லிய இருளும்..
மேகக் கூட்டங்களும்
சந்திரனும்..
அவன் சகாக்களும்..
நாச்சியாதீவு பர்வீன்.
2 கருத்துகள்:
//வழமைபோலவே
ரசித்துக் கொண்டிருந்தனர்..
மெல்லிய இருளும்..
மேகக் கூட்டங்களும்
சந்திரனும்..
அவன் சகாக்களும்..//
மெல்லிய பயம்கலந்த அதிர்ச்சி தருகின்றன வரிகள்.
lovely :)
cherakrish உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள்.
கருத்துரையிடுக