காலை வாரி விட்ட பின்வரிசை துடுப்பாட்டம்.
இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றாகும், இலங்கை அணியின் அசுரமான துடுப்பாட்டம் ஒன்றைமட்டுமே நம்பி
நமது அணி இந்த இந்தியத் தொடரில் பங்கு பற்றுவதாகவே கருத முடிகிறது, களத் தடுப்பிலும், பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நம்மவர்கள் பிரகாசித்ததாக கூறமுடியாது, எப்படியோ துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஒருமைதானத்தில் இலங்கை அணியின் பலமில்லாத பின்வரிசை துடுப்பாட்டத்தின் பலவீனத்தால் மூன்றாவது ஒருநாள் போட்டி இலகுவாக இந்தியா வசமாகியது.
நல்ல போர்மில் உள்ள தில்சானின் அவசரமான துடுப்பாட்டம், அவரது கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்த தவறியமை மொத்த ஓட்ட எண்ணிக்கையின் வீழ்சிக்கு பிரதான காரணமாகும், உபுல் தரங்க-தில்சான் இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள், கூட்டாக இயங்காத தன்மை, நானா? நீயா? என்ற மனப்பான்மை தில்சானை அவசரப் படுத்தியிருக்கலாம்,
உபுல் தரங்க-சங்ககார ஜோடி கூட அற்புதமாகத்தான் ஆடியது சங்ககார அநியாயத்திற்கு சேவக்கின் பந்து வீச்சிற்கு ஸ்டாம் செய்யப்பட்டு வெளியேறியது பரிதாபகரமானது, சங்ககாராவின் ஆட்டமிழப்பு மட்டுக்கும் அணியின் ஓட்ட எண்ணிக்கை சராசரி ஆறு வீதத்தை தாண்டியே சென்றது, அவரின் ஆட்டம் இழப்பின் பின் மஹேல மீண்டும் சொதப்பிவிட்டு சென்றார், அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது
மஹேல கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருக்கலாம், மஹேலவின் அற்புதமான துடுப்பாட்டம் எங்கே போனது பொறுமையும், நிதானமும் கலந்த அவரது துடுப்பாட்டத்தை இப்போதெல்லாம் அவர் வெளிப்படுத்த தவறுவது அணியில் அவரது இடத்தை எதிர் காலத்தில் கேள்விக் குறியாக்கலாம்.
சதம் அடிப்பார் என நினைத்த தரங்க ஏமாற்றினார், எல்லாம் அவசரம் தான்,
கண்டம்பி, கபுகெதர இருவரும் துடுபாட்டத்திட்கு சாதகமான மைதானத்தில் ஆட தகுதியற்றவர்கள், பெரும்பாலும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்திலேயே இவர்களின் பயிற்சிகள் இடம்பெற்றிருப்பதால் அவ்வாறன மைதானங்களில் மட்டுமே இவர்களால் ஆடமுடியும் என்பதை இவர்களது
அண்மைய துடுப்பாட்ட நிலவரம் தெளிவாக்குகின்றது, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதனமென்றால் வேகமாக துடுப்பெடுத்து ஆட வேண்டிய அவசியம் இல்லை பந்தை தடுத்து விக்கட்டை பறி கொடுக்காமல் இருந்தாலே போதும் என்ற நிலையில் தான் ஆட வேண்டும், இந்தவகையில் இவர்கள் இருவரையும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினால் நல்லது,
அஞ்சலே மத்திவின் வெற்றிடம் தெளிவாக விளங்குகிறது, இந்தப் போட்டியிலாவது சனத்தை பயன் படுத்தியிருக்கலாம், இலங்கை அணி சகல துறை ஆட்டக்காரர்களின் அவசியத்தை ஏன் இன்னும் உணராமல் இருக்கின்றது என்பது புரியவில்லை, சுராஜ் ரண்டிவ் நல்ல தெரிவு, வாஸ் போன்ற சகல துறை ஆட்டக் காரர்களின் அவசியம் அணியின் கட்டாயத்தேவை, பின்வரிசை துடுப்பாட்டத்தின் பலத்தில்தான் அணியின் சராசரி வெற்றி தங்கியுள்ளது.
ஜடேஜா, ஹர்பஜன், நன்றாக பந்து வீசினார்கள்,ஜடேஜா அற்புதமாக செயற்பட்டார். இலங்கை அணியை மடக்குவதில் இவர்களின் பங்களிப்பு மெச்சத்தக்கது.
இந்திய அணி வெகு கூலாக வெற்றி இலக்கை தொட்டது, சேவாக், டெண்டுல்கர் ஆகியோரின் அபாரமான ஆட்டம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தது, டெண்டுல்கார் மீண்டும் அசத்தினார், சிங்கம் சிங்கம்தான். அமைதியாக, வெகு கூலான டென்டுல்காரின் ஆட்டம் சூப்பெர்ப், என்ன ஒரு குறை வெறும் நாலு ஓட்டத்தில் சென்ச்சரியை தவறவிட்டது தான்.
இலங்கை அணி அடித்த ஆட்டத்திலாவது தன்னை சீர் செய்து கொள்ளுமா?........................பொறுத்திருந்து பார்ப்போம்.
2 கருத்துகள்:
நீங்கள் எழுதிய அதே எண்ணம்தான் எனக்கும் நேற்றையப் போட்டியைப் பற்றி
உங்கள் வருகைக்கு நன்றி தர்சன். உங்கள் இடுகையும் நன்றாகவே இருந்ததது.
கருத்துரையிடுக