கெகிராவ சுலைஹா எனும் ஆளுமை.....
கெகிரவ சுலைஹா நவீன பெண்ணியம் சார் திசையில் ஆழமான மனப்பதிவுகளை நிறுவி நிற்பவர், மிக நீண்ட காலமாக எழுதிவரும் இவர் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதியது மிக மிகக் குறைவு..ஆனால் இவரது எழுத்துக்களில் உள்ள வீரியமும், ஆழமும் அற்புதமானது.ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கான அருமை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை இந்த வகையில் மொழி பெயர்ப்பு இலக்கியம் தொடர்பில் தனது அவதானத்தை கெகிராவ சுலைஹா செலுத்தியுள்ளார் என்பது மிகுந்த அவதானத்துக்குரிய விடயமாகும், தொடர்ந்தும் மல்லிகையில் அவரது மொழி பெயர்ப்பு கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ள நிலையில் தனது இலக்கியப் பதிவை நிறுவும் முகமாகவும், மொழி பெயர்ப்பு ஆளுமையை வெளிக்காட்டும் முகமாகவும் அண்மையில் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய தொகுதியான "பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்" எனும் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவர் எழுத்தாளர் கெகிராவ சகானாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக