சிறு பான்மையினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும்..........
மீண்டும் ஒரு தேர்தல், களத்தில் புதிய முகங்கள் பல குதித்துள்ளன. பல பிரபல்யங்கள் ஆளுங்கட்சி சார்பாக தேர்தல் களத்தில் இல்லையில்லை தேர்தல் குளத்தில் வாக்கு மீன்களை அள்ளிக்கொள்வதட்கு தயாராகிவிட்டனர் சனத்ஜெயசூரிய மாத்தறை மாவட்டத்திலும், குறுந்தூர ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கேகல்ல மாவட்டத்திலும்ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜ பாக்ஸஅம்பாந்தோட்ட மாவட்டத்திலும் என்று தேர்தல் திருவிழாவை கலை கட்ட வைக்கும் முகமாக ஆளும் தரப்பு முழு முனைப்புடன் செயட்படுகிறது.
ஜேவிபி இனர் இம்முறை படுதோல்வி அடைவார்கள் என்பதை களநிலவரம் சொல்லுகிறது , தமிழரசுக்கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், போன்ற கட்சிகள் தமது பெரும்பாலான ஆசனம்களை இழந்து பொய் விடும், கடந்த ஜனாதி பத்திதேர்தளைப் போல இம்முறையும் ஆளும் கூட்டணி அமோகமாக வெற்றி பெரும் தேர்தல் நியாமாக நடந்தாலும், அல்லது அநியாயமாக நடந்தாலும்.
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் இந்தத் தேர்தலிலும் அது அம்மேல்தான்...சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து தாவியவர்கள் குறிப்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலிருந்து அரசுடன் இணைந்து செயப்படும் அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் பேரியல் அஸ்ரப் தவிர மற்ற எல்லோரும் மண்ணைக் கவ்வி விடுவார்கள் போலதான் இன்றைய கள நிலவரம் சொல்லுகிறது. ஆளும் கட்சி சார்பாக புதியவர்கள் பலர் வெற்றிபெறுவார்கள், பழையவர்கள் பலர் தோற்றுப் போவார்கள்
சிறு பன்ன்மையினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி அல்லது சிறுபான்மையினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற எடுகோள்இந்த இடத்தில் தான் நிறுவப் படுகிறது, கடந்தஜனாதிபதிதேர்தலில் மொத்த சிறுபான்மை சமூகமும் ஜெனரலுக்கு வாக்களித்து ஒரு வெளிப்படை உண்மையை தெரிந்து கொண்டார்கள் அதுதான் இப்போது அரசுக்கு சுக்கிர யோகம் தொட்ட தெல்லாம் துலங்கும் நாம் எத்தனை அரசுக்கு எதிராக வாக்களித்தாலும் அது அரசை ஒன்றும் செய்து மாறாக நம்மை நாம் இனங் காட்டிகொண்டவர்களாக மட்டுமே மாறுவோம் இதனால் நம்மீது வெறுப்பும், குரோதமும் மட்டுமே வளரும், இந்த உண்மையை சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம்,தமிழ் சமூகம் விளங்கி வைத்துள்ளது , எனவே இம்முறை சிறுபான்மையினரின் வாக்கில் அதிகமான சதவீதம் அரசாங்க கட்சிக்கே என்பது வெள்ளிடை மலை. வாக்கு வேட்டைக்காக மட்டுமே மக்கள், சமூகம், இனம் என்று பூச்சாண்டி காட்டும் அரசியல் முள்ளமாரிகளை, பச்சோந்திகளை விட ஆளும் அரசுடன் கை கோரத்து செல்வதே இன்றைய சூழலில் சிறுபான்மையினருக்கு நல்லது அதை விடுத்து நம்மை நாம் கட்டிக்கொள்ளும் விதத்தில் இந்ததேர்தலையும் நாம் பயன்படுத்த கூடாது , .....................................
0 கருத்துகள்:
கருத்துரையிடுக