மனசு முழுக்க காதல்.
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
ஊர் சுற்றி திரிந்த
எனக்கு ........
உருப்படி இல்லாத
எனக்கு...
யார் கண்பட்டதோ..
காதல் வந்திருச்சி
நிலவை நான்
ரசிக்கவில்லை..
நீல வானம்
விருப்பமில்லை..
கோல மயிலின் இறகை
என்றும்..புத்தகத்தினுள்
வைக்கவில்லை
காதல் என்ற பெயரில்
எங்கும் நான்...
கால் கடுக்க அலைந்ததில்லை.
இருந்தும்..
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
யாருவிட்ட சாபமோ..
எனக்குள் காதல்
வேருவிட்டு போச்சி
நீல வானம்
அதில் நீந்து மேகம்
காதல் சுமந்த காற்று
காலைநேர பனித்துளி
இலையருகே பூக்கள்
இத்தியாதி...இத்தியாதி....
எல்லாம் ரசிக்கிறேன்
இப்போது எல்லாம் ரசிக்கின்றேன்
ஓடும் நதியிலே
என் காதல் நீந்துது
ஓலமிடும் கடலிலும்
என்காதல் வாழுது..
காரணம் ...
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக