மழை,மழை, மழை...
இன்றைய பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி மழை யாகும்
கடுமையான மழையினால் மேல்மாகாணம், மலையகம்
என்பன பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது, அதிலும் மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறிப்போயிருந்தது
இந்த நிலைமையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிகள் கிடைத்த போதும்
அது போதுமான தாக இல்லை என்பது தான் உண்மை.
கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் வீடுவாசல்களை துறந்து, போக்கிடம் இல்லாமல் தவிக்கின்ற
நிலைமை உருவாகி உள்ளது, இந்த நிலையில் பாதிக்கப் பட்ட மக்கள் உடல்,உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளதோடு, அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய எந்த வித முனைப்புகளும் இல்லாமல் இருக்கின்ற அவலம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது,
தொடர்ந்தும் மழை பெய்யலாம் என்ற வானிலை ஆராய்ச்சி
நிலையத்தின் ஆருடம் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்தில் தாமதத்தை உண்டு பண்ணலாம்...
அரசாங்கத்தின் கையில்தான் .........இனி இவர்களின் வாழ்வு..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக